இந்த நிலையில், பிரதமர் ïசுப் ராஜா கிலானியின் மகன் அப்துல் காதிர் கிலானியும் போலி பட்டச் சான்றிதழ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாகாண சட்டசபை எம்.எல்.ஏ.வாக அப்துல் காதில் இருந்து வருகிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்திடம் இருந்து பி.ஏ. பட்டம் பெற்றதாக அவர் கூறி இருக்கிறார். ஆனால், அது போலியானது என்றும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி கூட அவருக்கு அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், போலி சான்றிதழ் விவகாரம் குறித்து விசாரிக்கும் கமிட்டி சார்பாக அப்துல் காதிருக்கு மூன்று முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஒருமுறை கூட கமிட்டி முன்பு அவர் ஆஜராகவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக