வெள்ளி, 8 அக்டோபர், 2010

தெரிந்து கொள்வோம்

o பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில் வைத்தியர்களுக்கு வித்தியாசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. நோயாளிகள் குணமடைந்தால் அவர்களுக்குக் கட்டணம் அளிக்கப்படும். நோய் குணமாகவில்லை என்றால், நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பணம் கொடுக்க வேண்டும்.

o நாம் உண்ணும் உணவு முழுதாக சமிபாடு ஆவதற்கு 48 மணி நேரம் ஆகும்.

o நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.

o மனிதர்களின் தொடை எலும்பு கொங்கிaற்றைவிட வலிமையானது.

o ஒரு மனிதன் உணவு உட்கொள்ளும் போது, சராசரியாக 295 முறை விழுங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

o மனித உடலில் தாடை எலும்புதான் மிகக் கடினமான எலும்பு.

o வளிமண்டலத்துக்குள் 50 கி.மீ. தூரம் வரை புகையைக் கக்கும் திறன் கொண்டவை எரிமலைகள்.

o 1811ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் மிசிசிப்பி ஆறு பின்னோக்கிப் பாய்ந்து அதிர்ச்சியளித்தது.

o ஐரோப்பிய கண்டத்தில் பாலை வனமே கிடையாது.

o காட்டுத்தீ மலைச் சரிவை நோக்கிப் பரவுவதைவிட, மலையின் மேற்புறமாக அதீத வேகத்தில் பரவும்.

o கங்காரு 30 அடி வரை தாண்டிச் செல்லும் திறன் கொண்டது.

o நெருப்புக் கோழியின் சிறு குடலின் அளவு 46 அடி!

o விலங்குகளில் உயர் இரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.

o ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்டதூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.

o பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு இரத்தத்தில் உள்ள புரதம் தேவை. அதனால்தான் இரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.

o பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.

o கண் இமைகளிலும் உள்ள முடிகள் 5 மாதங்கள் வரை உதிராமல் இருக்கும். தீயில் பொசுங்கினாலும் வளர்ந்து விடும்.

o கை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

o மனித மூளையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது.

o நமது உடலில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பாதங்களில்தான் அதிக அளவு வியர்வை நாளங்கள் உள்ளன.

o சராசரியாக மனித இதயத்தின் ஒரு துடிப்பில் 5 கரண்டி ரத்தம் பிரித்து அனுப்பப்படுகிறது.

o மனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப் பயன்படுத்துகின்றனர்.

o வலியை உணர்த்தும் சமிக்ஞை நம் நரம்புகள் வழியாக ஒரு விநாடிக்கு 50 அடி தூரம் வரை பயணிக்கிறது.

o நீர் வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். ஆரோக்கியமான திமிங்கலத்துக்கு சுமார் 260 பற்கள்.

o விலங்குகளில் அதிக பற்கள் உடைவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.

o ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

o நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவைவிடப் பெரிதாக இருக்கும்.

o கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிவப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்சியை கொடுக்கிறது.

o தலைகீழ் ஜென்னி என்பது 1918ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தபால் தலை. இதில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டு விட்டது. இந்தத் தபால் தலை உலகம் முழுவதிலும் 100 மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 150,000 அமெரிக்க டொலர்களாகும்.

o முதல் உழவு இயந்திரம் 1900 ஹோல்ட் என்பவரால் செய்யப்பட்டது.

o ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

o உலகில் அதிகமான பொருட்களு க்கு காப்புரிமை பெற்றிருப்பவர், தோமஸ் ஆல்வா எடிசன், 1069 கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.

o முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

o நெருப்புக் கோழிகள் மண்ணுக்குள் தலையை நுழைத்து தண்ணீரைத் தேடும்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல