செவ்வாய், 16 நவம்பர், 2010

தமிழினியின் விளக்க மறியல் 29 ஆம் திகதி வரை நீட்டிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினியினை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் தமிழினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தமிழினி மீதான விசாரணைகள் அறிக்கை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது ஆலோசனைக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்திற் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தமிழினியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல