அந்த சுப்பர் மார்க்கெட்டின் விற்பனை உதவியாளரான பெண்ணின் மார்பங்கள் தராசை அழுத்திக்கொண்டிருந்தமையினாலேயே மரக்கறிகளினதும் பழங்களினதும் எடை அதிகமாக காட்டப்பட்டுள்ளதாம்.
பிரிட்டனின் சனல் ஐலண்டின் கூட்டுறுவு நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஹோப்லே இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'குறித்த உதவியாளர் தவறுதலாக 5 ஸ்ரேலிங் பவுண்களை அதிகமாக வசூலித்துவிட்டார். தற்போது அந்தப்பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
'உண்மையில் இது துரதிஷ்டவசமாக நேர்ந்த விடயமாகும். அந்த பரிதாபகரமான விற்பனையாளர் பெண் இச்சம்பவத்தால் இழிவுப்படுத்தப்பட்டுவிட்டார். ஆனால் வாடிக்கையாளர் சரியாக அதை எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். அச்சம்பவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. நான் சம்பந்தப்பட்ட நபருக்காக மிகவும் வருந்துகின்றேன். அப்பெண் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
நாங்கள் பொருட்களை பொருத்தமான வகையில் நிறுக்க வேண்டும் என்ற நிறை மற்றும் அளவுகள் குறித்த சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.
நான் இது குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். நான் இதை நேரடியாக கவனித்து வருகிறேன். இங்கு பணியாற்றும் பெண்களில் சிலர் சிரித்துவிட்ட போதிலும் அந்தப் பிரச்சினையை நானே கையாளத் தீர்மானித்தேன்' எனவும் ஹோப்லே தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக