செவ்வாய், 16 நவம்பர், 2010

விற்பனையாளரின் மார்பகங்களால் அதிக கட்டணம் வசூலிப்பு

பிரித்தானிய சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண்ணொருவர் மரக்கறிகள் மற்றும் பழங்களை வாங்கியபோது உரிய தொகையைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்த மரக்கறிகள் மற்றும் பழங்கள் நிறுக்கப்பட்ட தராசு நிறையை அதிகமாக காட்டியுள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கோளாறுக்கு என்ன காரணம் என ஆராய்ந்துப் பார்த்தபோது எதிர்பாராத வித்தியாசமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சுப்பர் மார்க்கெட்டின் விற்பனை உதவியாளரான பெண்ணின் மார்பங்கள் தராசை அழுத்திக்கொண்டிருந்தமையினாலேயே மரக்கறிகளினதும் பழங்களினதும் எடை அதிகமாக காட்டப்பட்டுள்ளதாம்.

பிரிட்டனின் சனல் ஐலண்டின் கூட்டுறுவு நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஹோப்லே இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'குறித்த உதவியாளர் தவறுதலாக 5 ஸ்ரேலிங் பவுண்களை அதிகமாக வசூலித்துவிட்டார். தற்போது அந்தப்பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

'உண்மையில் இது துரதிஷ்டவசமாக நேர்ந்த விடயமாகும். அந்த பரிதாபகரமான விற்பனையாளர் பெண் இச்சம்பவத்தால் இழிவுப்படுத்தப்பட்டுவிட்டார். ஆனால் வாடிக்கையாளர் சரியாக அதை எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். அச்சம்பவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. நான் சம்பந்தப்பட்ட நபருக்காக மிகவும் வருந்துகின்றேன். அப்பெண் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

நாங்கள் பொருட்களை பொருத்தமான வகையில் நிறுக்க வேண்டும் என்ற  நிறை மற்றும் அளவுகள் குறித்த சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.

நான் இது குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளேன். நான் இதை  நேரடியாக கவனித்து வருகிறேன். இங்கு பணியாற்றும்  பெண்களில் சிலர் சிரித்துவிட்ட போதிலும் அந்தப் பிரச்சினையை நானே கையாளத் தீர்மானித்தேன்' எனவும் ஹோப்லே தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல