செவ்வாய், 16 நவம்பர், 2010

ஜனாதிபதியுடன் ஒரு இரவு படுக்க நான் தயார் - பெண் எழுத்தாளர் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)

ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்ரியன் வூல்ப், அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களை விரிவுபடுத்தும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தனது மறுப்பாணை அதிகாரத்தை பிரயோகிப்பாராயின் அவருடன் ஒரு இரவைக் கழிக்கத் தயாரென ஜேர்மனிய பெண் எழுத்தாளரான சார்லொட் ரொசி பகி ரங்க அறிவிப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெவித்தார்.

““அவர் மேற்படி திட்டத்தின் பிரேரணையில் கைச்சாத்திடாவிட்டால், அவருடன் உறங்க நான் தயாராக உள்ளேன்'' என அணு சக்தி எதிர்ப்பு செயற்பாட்டாளரான சார் லொட் ரொசி (32 வயது) கூறினார்.

““இதற்கு எனது கணவர் இணக்கம் தெரிவித்துள்ளார். இனி முதல் பெண்மணி தான் அனுமதி வழங்க வேண்டியுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட சார்லொட் ரொசி, 2008 ஆம் ஆண்டு வெளியாகி விற்பனையில் சாதனை படைத்த பாலியல் நாவலான “வெட்லான் டஸ்' நூலை எழுதியவராவார்.

அவர் கடந்த வாரம் ஜேர்மனிக்கு புகையிரதத்தில் எடுத்து வரப்பட்ட அணுசக்திக் கழிவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவராவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல