திங்கள், 30 ஜூன், 2014

கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்

திடீரென வீசிய கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று சேதம் அடைந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் இடம்பெற்றது.

"14 வயது “மனைவியை” விவாகரத்து செய்து விட்டு 12 வயது சிறுமியுடன் 2ம் திருமணம்!"

Mahammadu Saidu

நைஜீரியாவில் ஏற்கனவே 14 வயதான சிறுமியை திருமணம் செய்த ஒருவர் தற்போது அவரை தள்ளிவைத்துவிட்டு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தில் 'பவர்கட்': யாராவது கடத்தி இருக்க வாய்ப்பு அதிகம்

மாயமான மலேசிய விமானத்தில் திடீர் என்று மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது அதை யாராவது கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

“கோழி 65”... கண்டுபிடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

சென்னை: சரியான பசி.. வயிற்றுக்கு உய்ய வேண்டிய நேரத்தையும் தாண்டி ஓடியிருந்தது கடிகாரத்தின் முள்.. கண்ணில் பட்ட அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து டேபிளில் பாயாத குறையாக உட்கார்ந்து மெனு கார்டைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் கடகடவென ஆர்டர் கொடுத்து விட்டு சற்று ஆசுவாசமாக டேபிளைப் பார்த்தபோது கண்ணில் பட்டது..

"பத்தாயிரம் பேருடன் நான் படுக்கையை பகிர்ந்தவள்..."

Gwyneth Montenegro

"நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்" என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜிவைனத் மோன்டேனேக்ரோ. தற்போது 36 வயதாகும் இப்பெண்மணி தனது 21 வயதில் பாலியல் தொழிலுக்குள் புகுந்தார். தற்போது ஓய்வு எடுத்துவிட்டு வேறு தொழில் செய்து வரும், ஜிவைனத் தனது அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளை வாங்கியவர்கள் திரைத்துறையினர்?

இடிந்து விழுந்த மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவிலான வீடுகளை வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: அலறும் ரஷ்ய ஊடகங்கள்!

மாஸ்கோ: ரஷ்யாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக ஜான் டெஃப்ட்டை ஒபாமா அரசு அறிவித்தது முதல் அவரை மிகக் கடுமையாக ரஷியாவின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

சனி, 28 ஜூன், 2014

முன்நீரிழிவு நோய் வருவதற்கான 5 அறிகுறிகள்!!!

நீரிழிவு நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து விட்டு, அப்படி எதுவும் இல்லை என்று திருப்தியுடன் வெளியே வந்து விட்டீர்களா? ஆனால், உங்களுக்கு முன்நீரிழிவு வந்திருந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள்?

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில்.அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.

எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.

பெண்ணின் மார்பகங்கள் வெடித்துச் சிதறியது!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார்.

புதன், 25 ஜூன், 2014

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்

 "1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."

இனவாதத்தை கைவிடாதவரை இலங்கைக்கு விடிவில்லை

இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை ஊக்கப்படுத்துது. பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது. அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் எண்டு அது நினைக்குது. முந்தி இப்பிடித்தான் நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது' எண்;டு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ...

வெற்றியடைய வைச்சவையைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு ஒரு தும்புத்தடியைத் தன்னும் வாங்கியிருப்பினமா?

சிலபேரை எந்த மாதிரியான கெட்டிக்காரராலும் திருத்தவே முடியாது எண்டு சொல்லுவினமல்லோ... அதை மாதிரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள்ள இருக்கிற ஐஞ்சாறு வாத்திமாரையும் (சத்தியமாக இவை விரிவுரையாளர்களே இல்லை.) திருத்தவே ஏலாது.

செவ்வாய், 24 ஜூன், 2014

'அதற்குள்' மாட்டிக்கொண்ட மாணவனை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பெண் உறுப்பை போன்று, வடிவமைக்கப்பட்டுள்ள கல் சிலையின் அருகே நின்று, போட்டோ எடுக்க முயன்ற மாணவர் அந்த சிலைக்குள் சிக்கிக்கொண்டு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவம் படிக்க முடியாது; பொறியியல் படிக்கலாம்: இலங்கை அகதிகள் முகாம் மாணவியின் சோகம்

இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்று, படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சித்தார்த்தரைக் கண்டியளோ...


நேற்றிரவு பதறியடிச்சுக் கொண்டு நடுச்சாமத்தில அவசரமாகத் தொலைபேசியில கூப்பிட்டார் ஒரு வெளிநாட்டுவாசி. ஆள் புளொட்டின்ரை பழைய காய். நாடு, போராட்டம் எண்டதெல்லாத்தையும் விட்டிட்டுத் தூரப்போனாலும் அரசியல் தொடர்புகளை மட்டும் சிங்கன் கைவிடேல்லை. 'கரண்ட் பொலிற்றிக்ஸ்ஸிலை' எப்பவும் வலு ஆர்வமான ஆள்.

மைக்கேல் ஷூமாக்கரின் மருத்துவ ஆவணங்கள் திருட்டு: விற்பனைக்கும் வந்துள்ளது

கோமாவில் இருந்து மீண்டு வந்த பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் உடல் நலம் குறித்த ஆவணங்கள் திருடு போயுள்ளது.

திங்கள், 23 ஜூன், 2014

சாய்பாபா கடவுளில்லை… அவருக்கு கோவில் கட்டக்கூடாது

சாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்டவேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியுள்ளார்.

ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... கூகுளுக்கு லெட்டர் எழுதிய பாசக்கார 4 வயது மகள்!

கலிபோர்னியா: கூகுள் நிறுவன ஊழியரான தனது தந்தைக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த சிறுமியின் பாசத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு வார கால விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது கூகுள்.

மைக்கேல் ஷூமாக்கரால் இனி அடுத்தவர்கள் உதவி இன்றி வாழ முடியாதாம்

கோமாவில் இருந்து கடந்த வாரம் மீண்ட பார்முலா நம்பர் ஒன் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கரால் இனி தனது வாழ்நாள் முழுவதும் எதையும் தானாக செய்ய முடியாது என்று மருத்துவ நிபுணர் எரிக் ரீடெரர் தெரிவித்துள்ளார்.

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களுக்கு 1600 ஆண்டுகள் சிறைதண்டனை!



15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 ஆண்டுகள் சிறைதண்டனை!

டெக்சாஸ்: அமெரிக்காவில் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 13 ஜூன், 2014

இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

பெண்கள் என்று வரும் போது, இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சில விதிமுறைகள் பெண்களுக்கு பயன் அளிப்பதாகவும், சரியானதாக பட்டாலும் கூட, பல விதிமுறைகள் மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக இருக்கும். மேலும் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது.

ராஜபக்‌சேவுக்கு அமைதி விருது: பொலிவியா வழங்குகிறது

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்‌சேவுக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது.தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் 'ஜி77' நாடுகளின் உச்சி மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது.

செவ்வாய், 10 ஜூன், 2014

நிகழ்காலக் காட்சிகள் சில!

இடம் – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவு

ஒரு வயசு போன மனுசி காலமை பதினொரு மணிக்கு தன்ரை காணிப்பிரச்சினையைப் பற்றிக் கதைக்க வருது. வந்து, கந்தோரில இருக்கிற ஆட்களிட்ட விசாரிக்குது. கந்தோரில இருக்கிறவை ஆள் மாறி ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம். மனிசி ஒவ்வொருத்தரிட்டயும் போய்ப்போய்த் தன்ரை பிரச்சினையைச் சொல்லத் தொடங்க, ஒவ்வொருத்தரும் மற்ற ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம்.

திங்கள், 9 ஜூன், 2014

3 வயசிலேயே இவன் இப்படினா….18 வயசில் என்னாவான்?!

சீனாவில் தெருவில் நின்று சிகரெட் பிடித்த 3 வயது சிறுவன் ஒருவனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முன்னாள் புலிகள்!

மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்கள் மீது யாழ்ப்பாண பெண் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளார் என்று லண்டனில் இருந்து கிடைத்த தொலைபேசி முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் புலனாய்வாளர்கள் உண்மையை கண்டு பிடித்து உள்ளனர்.

தொடரும் அதிர்ச்சி வைத்தியம் 424 !

இலங்கை அரசாங்கத்தின் அதிர்ச்சி வைத்தியமான 424 புலம் பெயர் பயங்கரவாதிகளின் பெயர்கள் வெளியீடு உண்மையிலேயே பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு துர்ப்பாக்கியமான நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஞாயிறு, 1 ஜூன், 2014

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி???

மிக எளிமையான கேள்வி தான்!!! எதற்கும் உட்கார்ந்து யோசியுங்கோ!!!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடைக்காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்!!!

திகில் கதை.......... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்....

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவதுஉதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.

அங்க இருந்த துறவி சொன்னாரு...

சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி

ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே தாதியிடம் பால் குடித்ததால்... 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி கோர்ட்

ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக, சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம்.

தன்னை காதலித்த 70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்

113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பிரச்­சி­னை­களை இப்­படி கையா­ளுங்கள்

பிரச்சி­னைகள் வரும்­போது, புத்­தரும் காந்­தியும் அதை எப்­படி அணு­கி­யி­ருப்­பார்கள் என யோசி­யுங்கள்... வன்­மு­றை­யற்ற, அன்பு அணு­கு­முறை எல்­லோ­ருக்கும் கூட சாத்­தியம் ‘புத்­த­ரா­கவும், காந்­தி­யா­கவும் நடந்­துக்­கி­ற­தென்ன அவ்­வ­ளவு சுல­பமா... அதெல்லாம் நடக்­கிற காரி­யமா?’ என்­றார்கள் பலரும். புத்தர் மாதி­ரியோ, காந்தி மாதி­ரியோ நடந்து கொள்­வது யாருக்கும் சாத்­தி­யம்தான். ஆனால், அதற்­கொரு முனைப்பு வேண்டும்! அதெல்லாம் முடி­யாது என்­கி­ற­வர்­க­ளுக்கு ஒரு வழி இருக்­கி­றது. பெரிய முனைப்போ, முயற்­சியோ தேவைப்­ப­டாத எளிய வழி அது. ‘தவிர்ப்­பது’ என்­பதே அந்த வழி. ஆங்­கி­லத்தில் ‘ரெஸ்ட்­ரெயின்’ என்­கிறோம்.

சூடுபிடிக்கப் போகும் திருத்த சர்ச்சை

இலங்கை அர­சி­யலில், 13ஆவது திருத்­தச்­சட்ட விவ­காரம் இனிச் சூடு பிடிக்கப் போகி­றது. கடந்த வாரம் புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் இந்­தியத் தரப்பில் இந்த விவ­காரம் தான் முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மலவாயில் அரிப்பு

“சரி­யான அரிப்பு” என்று சொன்­ன­வ­ரது கை பின் பக்­க­மாகப் போன வேகத்தைப் பார்த்­த­போது வேட்­டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறி­வாரோ எனப் பயம் வந்­தது. ஆனால் செய்­ய­வில்லை. “தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகு­தில்லை” என அலுத்துக் கொண்டார்.

வாழைப்பழ தோசை

சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பொக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்:

மலே­ஷி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம்!

மலே­சி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம் நில­வு­வ­தாக சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நபர் அவுஸ்­தி­ரே­லியா அனுப்­பு­வ­தாக ஏமாற்­றியே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவரின் மனைவி குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

15 வயது சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்:மலேஷியாவில் அதிர்ச்சி

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

அவதானம்! இப்படியும் நடக்கிறது..

அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் சிறிமல் நேரில் வந்து கூறிய சம்பவம் ஒன்றை வாசகர்களுக்கு தருகின்றோம்.

'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.

மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.

புலுடா ராமசாமிகளும் புண்ணாக்குத் தமிழர்களும்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டோம் எண்டு சில நாட்களுக்கு முதல் செல்வம் அடைக்கலநாதன் சொன்னதைப் பற்றி இந்தப் பக்கத்தில எழுதினதைப் பார்த்திட்டுச் சில தேசியவாதிகள், 'செல்வத்தார் சொன்னதில என்ன பிழை? தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கிற கூட்டமைப்பின்ரை முடிவை நாங்கள் ஆதரிக்கிறம். ஏமாற்றுகிற நோக்கத்தோட இருக்கிற அரசாங்கத்தை அம்பலப்படுத்த வேணுமே தவிர, அதைப் பாதுகாக்கேலாது' எண்டு என்னோட சண்டைக்கே வந்திட்டினம்.

மார்பிலே பாயும் வளர்த்த கடாக்கள்தான் இனியுமா?

வகைதொகையில்லாமல் பிறகும் பெடியள் பிடிபடுகிற ஒரு காலம் பிறந்திருக்கு....

இது எங்க போய் முடியப்போகுதோ... எங்க கொண்டுபோய் விடப்போகுதோ.... அந்தோனியாரே...

மோடி - மஹிந்த சந்திப்பின் பின் யாழ். மேயர் ஏற்படுத்திய குழப்பம்!

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து அது குறித்து வெளியிட்ட கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக 'த சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல