திங்கள், 22 நவம்பர், 2010

மாணவியை கொலை செய்த வத்தியாருக்கு 39 ஆண்டு சிறை

பிரேன் பிரதான்
இந்தியாவில் உள்ளமேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் பிரேன் பிரதான். 43 வயதான இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு நேபாள நாட்டில் குடியேறினார். அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்தார்.
கையாதி ஷ்ரேஷ்தா
இந்த பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி கையாதி ஷ்ரேஷ்தா. தன் வீட்டு வேலைகளை செய்ய தனக்கு உதவுமாறு ஷ்ரேஷ்தாவை அவர் கட்டாயப்படுத்தினார். இதன்படி வீட்டுக்கு வந்த மாணவிக்கு போதை மருந்து பழக்கத்தை ஏற்படுத்தி, அவரை அடித்து உதைத்தார். பிறகு அவரை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்தார்.

அவரை போலீசார் கைது செய்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 39 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல