குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.
இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.
ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக