திங்கள், 31 மார்ச், 2014

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

மலேசிய விமான புலனாய்வு-1: மலேசியன் ஏர்லைன்ஸூக்கு எந்தளவுக்கு விஷயம் தெரியும்?

கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் சென்றுகொண்டிருந்த விமானம் மாயமாக மறைந்த மர்மம் பற்றி இன்னமும் புலனாய்வு செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், உருப்படியாக எந்த தடயமும் இல்லை. விமானம் விழுந்திருக்கலாம் என இவர்கள் நம்பும் கடல் பகுதியில் இருந்து, விமானத்தின் பாகங்கள் ஏதும் இதுவரை கிட்டவில்லை.

“இனம் திரைப்படம், இன்று முதல் தியேட்டர்களில் இருந்து வாபஸ்!” -லிங்குசாமி

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, பலத்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட ‘இனம்’ படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் அப்படத்தின் விநியோகஸ்தர் இயக்குநர் லிங்குசாமி.

ஓ.கே. ஜெனிவாத் திருவிழா முடிஞ்சுது... பை பை..

அமெரிக்காவின் இந்த வருட திருவிழா இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் அடுத்தவருடம் தொடரும்.....“

ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.

இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.

சவுண்டாக பறந்த விமானம்... பேச்சை மறந்த விஜயகாந்த்...எடுத்துக் கொடுத்த வேட்பாளர்

சென்னை: ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஏ.எம் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து தர்மராஜா கோவில், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று‌ விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சனி, 29 மார்ச், 2014

சுவிஸில் இரட்டை வாழ்க்கை வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் (Video)

சுவிசர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் என்ற ஜேர்மன் மொழி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் இழுத்தடிக்கும் அரசாங்கம்! புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டி வருவதாக புலம்பெயர் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்

குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன

தேடிவரும் கப்பலில் ஒன்று

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.

ஜெயலலிதா விஜயகாந்துக்கு கொடுத்த ஷாக்! அண்ணனும், அண்ணியும் அதிரடி பிரசாரத்துக்கு ரெடி!!

தனது அரசியல் எதிரிகளுக்கு அவ்வப்போது ‘ஷாக்’ கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார். விஜயகாந்த்தின் சகோதரர் பால்ராஜ், அவரது மனைவி வெங்கடலெட்சுமி ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைத்து விஜயகாந்த்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

‘இனம்’ திரைப்படம்: காட்சிகள் வெட்டப்பட்டு, ஈழப் போராட்டம் காப்பாற்றப்பட்டது!

வெள்ளிக்கிழமை வெளியான ‘இனம்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து படத்தில் இருந்து ஐந்து காட்சிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர் இயக்குனர் லிங்குசாமி.

எண்ணெய் கறைகளைப் போக்க...

எண்ணெய் பசைகள் எங்கு படிந்தாலும், அவ்வளவு எளிதில் போய்விடாது அப்படியே தங்கி, ஒருவித பிசுப்பிசுப்பை ஏற்படுத்தும். மேலும் அவை ஓர் இடத்தில் படிந்தால், அது படிந்த பொருட்களை பார்த்தால், அழுக்குள்ளது போது காணப்படும். இத்தகைய எண்ணெய் பசைக் கறைகள் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். ஏனெனில் சமையலில் எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கமாட்டோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அது தெரிந்தோ, தெரியாமலோ ஆடைகள், தரைகள், சுவர் மற்றும் பல இடங்களில் படிந்து, வீட்டையும், ஆடையையும் அசிங்கமாக வெளிப்படுத்தும்.

மொசைக் தரையை சுத்தம் செய்வதற்கான சில சிம்பிளான டிப்ஸ்...

தற்போது நிறைய வீடுகளில் சிமெண்ட் தரைகளை விட மொசைக், மார்பிள் போன்ற தரைகள் தான் உள்ளது. இவை அனைத்தும் அழகுக்காக இருந்தாலும், இத்தகையவற்றில் அழுக்குகள் எளிதில் படிவதுடன், அவை அசிங்கமாக நன்கு வெளிப்படும்.

சிந்திக்க சில படங்கள்


உலக ஜனாதிபதிகளின் சில முத்தக்காட்சிகள் (படங்கள்)



மணல் பெண் (sand girl) (படங்கள்)


பால்மாற்று அறுவை சிகிச்சை (Sex Change Operation) (படங்கள்)


வெள்ளி, 28 மார்ச், 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளுடன் பேசும் போன் வைத்திருந்த ‘ஆர்மி அங்கிள்’

அத்தியாயம் 16

கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

மலேசிய விமான அதிர்ச்சி: சீனாவில் பயணிகளுக்கு ஆயுள் இழப்பீட்டு தொகை வழங்குகிறார்கள்!

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், “விமானம் கடலில் மூழ்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; விமானத்தில் பயணிகளாக இருந்த எமது உறவினர்கள் கடத்தப்பட்டு, எங்கோ வைக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறிக்கொண்டு உள்ள நிலையில், சீனாவில் அதிர வைக்கும் காரியம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.

மலேசிய விமானம்: இப்போதுதான் ‘திடீரென’ கிடைத்ததாம், ஒரு புதிய ‘தலைகீழ்’ தகவல்!

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்கள் திசைதிருப்பப்பட்டன என சிறிது நேரத்துக்குமுன் BRIEF NEWS வெளியிட்டிருந்தோம். இதற்கு காரணம், தற்போது கிடைத்துள்ள புதிய தரவுதான்.

மலேசிய விமானத்தை கேப்டன் ஷா கடத்தினாரா? யு.எஸ்.ஏ. டுடே சொல்வது நிஜமா?

“மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை திசைதிருப்பி சென்றது அதன் பிரதான விமானிதான். இந்த திசைதிருப்பலின் முழுப் பங்கும் அவரையே சாரும்” என அமெரிக்க பத்திரிகை யு.எஸ்.ஏ. டுடே வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? (காணொளிகள்)

 உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன்
விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள்.

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இது இனமா... ராஜபக்சேவின் பணமா?
இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்.

மலேசிய விமானம் பற்றி புதிய 'முக்கிய' தகவல்: தேடல் பகுதி மாற்றம்

கோலாலம்பூர்: விசாரணையாளர்களுக்கு புதிய தகவல் கிடைத்ததை அடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் வேறு பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நான் பயப்படமாட்டேன் - ராஜபக்சே

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு பயமில்லை: ராஜபக்சே திமிர் பேச்சு

கொழும்பு: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை ஏன் ஏற்க முடியாது: இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா விளக்கம்

ஜெனிவா: இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை திடீரென இந்தியா ஏற்க மறுத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

வியாழன், 27 மார்ச், 2014

பிரபாகரனின் இந்த புகைப்படத்தின் கதை...!!

பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் சென்னை பாண்டி பஜாரில் பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனர்.

இச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை : வைத்திய நிபுணரின் சாட்சியத்துடன் காணொளியை வெளியிட்டது சனல்-4 !!

இறுதி நாளில் என்ன நடந்தது சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது.

ஷூமாக்கரின் ரசிகர்கள் கெட்ட செய்தியை கேட்க தயாராகுங்கள்: முன்னாள் எஃப் 1 டாக்டர்

பாரிஸ்: கோமாவில் இருக்கும் முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் குறித்த சில வருத்தம் அளிக்கும் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

நாடே சோகத்தில் மூழ்கியுள்ளபோது கோல்ப் விளையாடிய மலேசிய ராணி (படங்கள் இணைப்பு)

கோலாலம்பூர்: மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் கடலுக்குள் விழுந்த சோகத்தில் மலேசியா இருக்கையில் அந்நாட்டு ராணி கோல்ப் விளையாடியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்- இந்தியா புறக்கணிப்பு!!

ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

சின்ன வெங்காய அறுவடை…

யாழ்ப்பாணத்தில் தற்போது சின்ன வெங்காய அறுவடை மும்முரமாக மேற் கொள்ளப்படுகின்றன. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட விவசாயிகள் வெங்காயச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டினர்.
யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.

இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் Facebook மோகம்

உல­க­ளா­விய ரீதியில் பேஸ்புக் வலையில் விழு­வோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதற்கு இலங்கை மாத்­திரம் விதி ­வி­லக்­கல்ல.

பேஸ்புக் பற்றி அறிந்­து­கொண்டு அதனைப் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சாத­க­மான பலன்­களை அனு­ப­விக்கும் அதே­வேளை அது­பற்றிய அடிப்­ப­டையைக் கூட அறிந்­து­கொள்­ளாமல் பயன்­ப­டுத்­து­ப­வர்­களின் கதி ஆழம் அறி­யாமல் காலை விட்­டது போலத்தான்..!

உள்ளாடை அகற்றப்பட்டிருந்தது: குராமின் காதலி சாட்சியம்

என்னுடைய காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அடையாளம் காட்டவில்லை என்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேகின் காதலியான விக்டோரியா எலஸ்சென்றானா சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாணத்தில் வீசும் மாற்றத்துக்கான காற்று

 KFC in Jaffna

யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில் சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.

புலிகளுக்கு உதவிய கனடா இளைஞனுக்கு இரு வருட சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதம் வாங்கியமைக்க்காக 08 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ரோரன்ரோவை சேர்ந்த ஆட்களில் கடைசி நபருக்கும் நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

புலித் தலைவர் கோபிக்கு ஆதரவான இளைஞர் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படுகின்ற கோபியை கண்டு பிடிக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்று கோரி பொலிஸாரால் பொது இடங்களில் இடப்பட்ட சுவரொட்டிகளை அகற்றியமைக்காக முல்லைத்தீவில் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியரை கொன்ற இளைஞனுக்கு டுபாயில் மரண தண்டனை தீர்ப்பு!

இந்திய தொழிலதிபரை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு, சார்ஜா மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார் இலங்கை இளைஞன் ஒருவர்.

புதன், 26 மார்ச், 2014

சிக்கனமான முறையில் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்துவதற்கான வழிகள்!!!

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.

கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!

திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை. சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும்.

இளம் பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 6 பரிசோதனைகள்!!!

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை.
இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன.
இந்த கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.

Malaysia plane: 10 questions that are still unresolved

As the search for missing Malaysia Airlines flight MH370 continues in the southern Indian Ocean, some key questions remain unanswered.

Here are 10 questions about what happened to the Boeing 777 that disappeared after leaving Kuala Lumpur bound for Beijing on 8 March, with 239 people on board.

1. Why did the plane make a sharp left turn?

இந்துவாக வசித்து வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி

பாட்னா, மும்பை, வாரனாசி மற்றும் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தெஹ்சீன் அக்தர் கைது செய்யப்பட்டான். அவன் ராஞ்சியில் நெற்றியில் திலகமிட்டு இந்து போன்று வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து போலீசார் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் தலைதூக்கும் எல்.ரீ.ரீ.ஈ தீவிரவாதம்


வடபகுதி சூழலை அவதானிக்கும் போது மீண்டும் இலங்கையில் ஓர் அசாதாரன சூழல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் கொள்ளும் வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடபகுதியிலிருந்து இராணுவத்தினரை அகற்றவேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும் இவ்வேளை, புலிகளின் காலப்பகுதியில் பயன்படுத்திய சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறுவகையான ஆயுதங்கள் நிலத்திற்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.எனவே அவ்வகையான ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் கருவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தன. இக்கருவிகள் புனர்வாழ்வு பெறாத முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களினால் களவாடப்பட்டமை பதற்றத்தை தோற்று வித்துள்ளது.

கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்?

மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!

விமான விவகாரம்: மலேசியா எதையோ மறைக்கிறதா?

கோலாலம்பூர்: மாயமாகி 2 வாரங்களுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படும் விமானம் விவகாரத்தில் மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செவ்வாய், 25 மார்ச், 2014

விமானம் கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்க மலேசிய அரசுக்கு ‘ஏதோ நிர்ப்பந்தம்’ காரணம்?

 விமானம் எப்படி இங்குவரை வந்தது?

மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 56

விடுதலைபுலிகளை பிடிக்க சி.பி.ஐ. ஒரு திட்டம் போட, ‘தமது பாணியில்’ சுற்றி வளைத்த போலீஸ்!

அத்தியாயம் 56


மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 57

விடுதலைபுலிகளை உயிருடன் தப்பி செல்ல விடுங்கள் என்றார் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன்!

அத்தியாயம் 57

ராஜிவ் கொலை புலனாய்வில் பிரதான திட்டமிடலை செய்தவர் என கருதப்பட்ட சிவராசன் இருக்கும் வீட்டை, சி.பி.ஐ. புலனாய்வுப்படை, கறுப்புப் பூனைப்படையினர், மற்றும் கர்நாடகா போலீஸ் சூழ்ந்து கொண்ட விபரத்தை கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம்.

ஜெனிவாவில் பிளவுபட்டு நிற்கும் தமிழர் தரப்பு


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் கடந்த வியாழக்கிழமை ( மார்ச் 20) ஐக்கிய நாடுகள் சபை உலக மகிழ்ச்சி தினத்தையும் கொண்டாடியது.உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.

கடனட்டை மோசடியில் கை தேர்ந்த ஈழ தமிழ் அகதிகள்!

சர்வதேச கடனட்டை மோசடிச் சூத்திரதாரியான இலங்கைத் தமிழர் ஜயந்தரன் தம்பபிள்ளை - வயது 28 என்பவர் இம்மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தில் பல இலட்சம் ரூபாயை இந்தியாவில் செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களை சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகித்து உள்ளார் என்று தெரிகின்றது.

சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்


ரெஸ்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர விரும்பும் அலாஸ்கா மக்கள்

அலாஸ்கா: கிரிமியாவை தங்களுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டது போன்று தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர்.

உயிரின் மதிப்பு கேவலம் 3 லட்சமா?

”விமானத்தின் மேல் பழியைப் போட்டு எங்கள் உறவுகளை கொன்று மூழ்கடித்துவிட்டது மலேசியா” உறவினர்கள் கதறல்

கோலாலம்பூர்: "விமான விபத்திற்கு மலேசியாதான் முக்கிய காரணம்.மலேசிய அரசாங்கம்தான் எங்களது உறவுகளை அநியாயமாக கொன்றுவிட்டது.இறந்த எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்" என்று விமான பயணிகளின் உறவினர்கள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"குட் நைட் MH 370"

துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு நிற முதல்பக்கம்- மலேசிய செய்தித்தாள்கள்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டு தங்களது துக்கத்தை வெளி்படுத்தியுள்ளன.

Newspaper apologises for showing Obamas as apes

A Belgian newspaper apologised Monday following outcry over an image showing US President Barack Obama and First Lady Michelle Obama with their faces photoshopped to look like apes. The image was printed alongside another that implies President Obama sells marijuana.

மலேசிய விமான புலனாய்வு: ரேடியோவில் பைலட் பேசாமல், கோ-பைலட் பேசியது ஏன்?

“மாயமான மலேசிய விமானம் இந்தியக் கடலின் தென் பகுதியில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது” என்ற மலேசியப் பிரதமரின் அறிவிப்பு நேற்று வெளியான போதிலும், இந்த விமானம் மாயமானது எப்படி என்ற மர்மம் இன்னமும் தொடர்கிறது.

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை இரத்தம் தோய்ந்த வாளுடன் நின்று எழிலன் அச்சுறுத்தினார் - புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கர்ணன்

வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

தேவியன் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல