வியாழன், 18 மார்ச், 2010

உலகில் முதன் முதலாக பரபரப்பை ஏற்படுத்திய "செக்ஸ்" ஊழல்

John Profumo (1915 – 2006)

பண்டைய கால மன்னர்கள் ஆட்சி ஆனாலும் சரி, இக்காலத்து அரசியல் ஆனாலும் சரி, இந்த `செக்ஸ்' விவகாரம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய பதவிகளுக்கு வேட்டு வைத்து இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில்கிளிண்டனுக்கும், வெள்ளை மாளிகை (ஜனாதிபதி மாளிகை) பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட `செக்ஸ்' விவகாரம் புயலை கிளப்பியது. கோர்ட்டு வரைக்கும் சென்ற இந்த விவகாரம், ஒரு வழியாக சுமூகமாகி கிளிண்டனின் பதவி தப்பியது.

இந்த `செக்ஸ்' விவகாரம் இன்று நேற்றல்ல 40 ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதன் முதலாக "செக்ஸ்" விவகாரத்தில் சிக்கி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மந்திரி ஒருவர் பதவியை இழந்தார். இது 1963_ம் ஆண்டில் நடந்தது.

அந்த மந்திரியின் பெயர் பிரபியூமோ. இங்கிலாந்து மந்திரி சபையில் யுத்த மந்திரியாக பதவி வகித்தார். கன்சர்வேடிவ் (பழமையாளர்) கட்சியைச் சேர்ந்தவர். 48 வயதான மந்திரி பிரபியூமோ திருமணம் ஆனவர். மனைவி பெயர் வேலரி காட்சன். இவர் நடிகையாவார்.

பிரபியூமோவுக்கும், கிறிஸ்டியன் கீலர் என்ற அழகிக்கும் காதல் ஏற்பட்டது. இதே சமயம் கீலருக்கும், ரஷிய கடற்படை அதிகாரிக்கும் தொடர்பு இருந்தது.
Prostitute Christine Keeler

அழகி கீலரின் தொழிலே விபசாரம்தான். இதனால் மந்திரி பிரபியூமோ _ கீலர் காதல் விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகியது. "கீலர் ஒரு விபசாரி. ரஷிய அதிகாரியுடனும் தொடர்பு வைத்திருக்கிறாள். எனவே, இங்கிலாந்து நாட்டின் ராணுவ, அரசாங்க ரகசியங்கள் பிரபியூமோ மூலம் கீலருக்கு தெரிந்து, ரஷியாவுக்கும் போய்விட்டன" என்று பத்திரிகைகள் எழுதின.

இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

ஆனால், இந்த விவகாரத்தை பிரபியூமோ திட்ட வட்டமாக மறுத்தார். "எனக்கும், அவளுக்கும் (கீலர்) தொடர்பு இல்லை. அப்படி கூறப்படுவது சுத்தப்பொய்" என்று கூறினார்.

அவருடைய இந்த மறுப்பு வெகு நாளைக்கு நிலைக்கவில்லை. குட்டு உடைந்து உண்மை வெளிவந்தது. கீலர் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்டாள். அந்த விசாரணையின்போது அவள் "எனக்கும், பிரபிïமோவுக்கும் தொடர்பு உண்டு" என்று கூறிவிட்டாள்.

இதனால் கீலருடன் உள்ள தொடர்பை மந்திரி பிரபியூமோவும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1963_ம் ஆண்டு ஜுன் 5_ந்தேதி மந்திரி பதவியை பிரபியூமோ ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்தார். அந்த ராஜினாமா கடிதத்தில் அவர் கூறி இருந்ததாவது:-

"அரசாங்க ரகசியங்கள் எதையும் நான் கீலருக்கு தெரிவிக்கவில்லை. என்றாலும் உண்மையை மறைத்து, கீலருடன் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறி இருந்தேன். என் குடும்ப கவுரவத்திற்காக நான் பொய் சொல்லிவிட்டேன். அப்படி பொய் சொன்னதால் இனி பதவியில் நீடிக்க எனக்கு அருகதை இல்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்."

இவ்வாறு பிரபிïமோ தெரிவித்து இருந்தார். `செக்ஸ்' விவகாரத்துக்காக உலகில் முதல் முதலில் பதவியை இழந்த மந்திரி இவர்தான்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல