வியாழன், 28 ஏப்ரல், 2016

முதலாளியின் ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்த பணிப்பெண்: தீயாக பரவிய வீடியோ

குவைத்தில் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளிக்காக தயார் செய்யப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்தது சமையல் அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. குவைத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இரண்டு பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

புதன், 27 ஏப்ரல், 2016

ஆண்களின் வலது கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறியலாம்

 Researchers in South Korea say finger ratios affect the size of testicles. Men with larger testes were found to have longer ring than index fingers. The study was based on 172 Korean men aged 20 to 69 years old. In the image above, the hand on the left would have smaller testicles than the one on the right

ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆணின் விதைப்பையின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஹார்ட் ட்ரைவைப் பூட்டிவிடும் 'பெட்யா' வைரஸ்

ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் புதியவகை பிணைப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் PETYA Crypto-ransomware.

பழக்கத்தில் இல்லாத பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வேர்ட் டிப்ஸ்... ஹைலைட் செய்த சொற்களை மாற்ற - சொற்களுக்கிடையே அடிக்கோடு

ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா? எனக் கேட்டுள்ளார். இவருக்கான பதிலை அனைவரும் படிக்கும் வகையில் டிப்ஸாக இங்கு தருகிறேன்.

எக்ஸெல் டிப்ஸ்... பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட - தலைப்பு தொடர்ந்து காட்டப்பட

பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட: நீங்கள் முதன் முதலில், எக்ஸெல் புரோகிராமினைத் தொடங்குகையில், காலியாகக் காணப்படும் ஒர்க் ஷீட்டில், சில அம்சங்கள், மாறா நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருகக்கும். அவற்றில் நீங்கள் ஒர்க் ஷீட் அச்சடிக்கையில் தேவைப்படும் பக்க மார்ஜின் ஒன்றாகும். நீங்கள் இதனை மாற்றி அமைக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும்.

தமிழுக்கான புதிய யுனிகோடு எழுத்துருக்கள்

கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது 'லதா' என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர்.

வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்யப்படுமா?

வாட்ஸ் அப் செயலிதான் இன்று பன்னாட்டளவில், உடனடியாக செய்திகளை, போட்டோக்களை அனுப்ப அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. அண்மையில், இதில் பதிந்து அனுப்பப்படும் தகவல்கள், முழுமையாக 'என்கிரிப்ட்' (தரவுமுறையினை மறைக்கப்பட்ட குறியீடாக மாற்றி அனுப்பும் முறை) செய்யப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தபோது, பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தியாவில் இது அனுமதிக்கப்படாது என்றே தெரிகிறது.

சனல் 4 வெளியிட்ட புகைப்படத்திலிருந்த 5-வது நபரும் அடையாளம் காண்பிப்பு

image source: google
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கச்சதீவும் புறம்போக்கு நிலமும்

கச்சநீதிமன்றம் சென்று உச்சத்தீவை மீட்பதாகச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

என்ன உளறலாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? கேட்பது உளறல் என்றால் சொல்வதும் உளறல்தானே.

அருப்புக்கோட்டைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா உச்சநீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்னார். இதை இப்போது சொல்வானேன்?

நடிகை ஜெயலலிதா அவர்களே... - மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!

நடிகை ஜெயலலிதா அவர்களே..

''தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல்.

கொள்ளையர்களுக்கு ஓர் அன்பு மடல்

கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அன்பு வணக்கம். கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு; நீதிபரிபாலனத்துக்கு என எழுதிக் களைத்த நிலையில் உங்களுக்குக் கடிதம் எழுவதுதான் ஒரே வழி என்ற முடிவில் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
உங்களின் திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடாநாட்டு மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

செல்பி எடுத்தபடியே தற்கொலை செய்துகொண்ட புதுமணத் தம்பதி!

திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 25 ஏப்ரல், 2016

இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -13)

• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது.

• கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!!

• மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்

தொடர்ந்து…

வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

பூசகர்களான தந்தை, மகன் தீ விபத்தினால் மரணம்

கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

ரொரன்ரோவில் பாலியல் துஷ்பிரயோகம் தமிழர் கைது!

ரொரன்ரோவில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கைதுசெய்யப்பட்டவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின் 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பி தலையில்லா முண்டத்தைப் "பரிசாகப்" பெற்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

அகர்தலா: உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு அந்த அமைப்பு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய் மீன் வறுவல் - சிக்கன் கடாய் - சிக்கன் வடை - கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

 நெய் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2ஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50கிராம்
எலுமிச்சை சாறு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு

மீன் வடை - ஆம்பூர் மட்டன் பிரியாணி - மீன் கட்லட்

மீன் வடை

அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு

பஞ்சாபி சிக்கன் கறி - சிக்கன் கட்லெட் - மங்லோரியன் சிக்கன்

பஞ்சாபி சிக்கன் கறி

தேவையான பொருட்கள்:

சிக்கன்-1/2கிலோ

தயிர் -3/4கப்

இஞ்சி விழுது-1tbsp

பூண்டு விழுது-1tbsp

மிளகாய் தூள்-1tbsp

தக்காளி சிக்கன் கிரேவி - ஆட்டுக்கறி சமோசா - ஸ்பெஷல் மட்டன் மசாலா

ஸ்பெஷல் மட்டன் மசாலா

தேவையான பொருட்கள்

மட்டன் – 500 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
உப்பு - சிறிதளவு
மல்லிப்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு

உருளைக்கிழங்கு தட்டை - சோள ரொட்டி - கோழிக்குழம்பு

உருளைக்கிழங்கு தட்டை

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 250g
அரிசிமா - 100g
கடலைமா - 100g
கறிவேப்பிலை - 50g
பூண்டு - 25g
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

அவல் லட்டு - தேங்காய் லட்டு -கடலைப் பருப்பு போளி

அவல் லட்டு

தேவையான பொருட்கள்

அவல் - 500g
சீனி - 500g
முந்திரி -100g
ஏலக்காய் -25g
நெய் - 250ml

பப்பாளி சான்ட்விச் - உப்புமா & ரவைப்பிட்டு

பப்பாளி சான்ட்விச்

தேவையான பொருட்கள்

பப்பாளி -2 கப் (சிறு துண்டுகளாக்கியது)
சீனி - 1/2 கப்
ரொட்டி - 20
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1/2 கப்

நெத்தலிக்கருவாட்டுக்குழம்பு

தேவையான பொருட்கள்

நெத்தலி - 100g
உருளைக்கிழங்கு - 100g
தக்காளிப்பழம் - 2
வெங்காயம் - 50g
பச்சைமிளகாய் - 4
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் , தேசிக்காய் சாறு , கறிவேப்பிலை - சிறிதளவு

கரட் வறை

தேவையான பொருட்கள்

கரட் - 100g
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் - தேவைக்கேற்ப

பிஸ்கட்

தேவையான பொருட்கள்

கோதுமை மா - 300g
மாஜரீன் - 300g
சீனி - 300g (தூளாக்கியது)
பேரீச்சம்பழம் - 100g
பிளம்ஸ் - 50g
பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி

முந்திரி அல்வா

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு – 1 1/2 கப்
சர்க்கரை – 3 கப்
நெய் – 3 /4 கிராம்
பால் – 1 /4 கப்

எலுமிச்சை சாதம்

பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
செ.மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 மே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்த கச்சான் - 1மே .கரண்டி
எலுமிச்சம்பழம் - பாதி

செய்முறை:-

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்!!!

தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை நாம் தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களாலும் வரலாம். எனவே ஒருவர் தலைக்கு குளிக்கும் போது ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அப்படி அந்த விதிமுகளைப் பின்பற்றினால், தலைமுடி பிரச்சனைகளில் இருந்து பாதி விடுபடலாம்.

பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்

பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை. இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், நேற்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எலிசபெத் மகாரணி பிறந்தார்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது - விஷால் குஷி

தென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ஒளிந்து கொள்ள...

நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் முகவரியினைக் கேட்கும். கூடவே, நம் மொபைல் போன் எண்ணையும் கேட்டுப் பெறும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன.

எக்ஸெல் டிப்ஸ்: எக்ஸெல் கணக்கிடும் வழி - அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

எக்ஸெல் கணக்கிடும் வழி
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்?

வேர்ட் டிப்ஸ்: மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்ட

மொத்த பக்க எண்ணிக்கைவேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

வேர்ட் டிப்ஸ்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட - டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்

வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.

இன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது.

விண்டோஸ் 10 சில தெளிவுரைகள்

என் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மெதுவாக இயங்கும் என்று சொல்லப்படுகிறதே?
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.

யாழில் வாழையிலை தொப்பி

இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் கொளுத்தும் வெயி­லி­லி­லி­ருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்கு மக்கள் பல்­வேறு உபா­யங்­களை பின்­பற்ற முனை­கின்­றனர்.

பொடுகுத் தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலைத் தரும் சில ஆயுர்வேத வழிகள்!

பொடுகு என்பது குளிர் காலத்தில் தான் வரும் என்பதில்லை. அனைத்து காலங்களிலும் பலரையும் அவஸ்தைப்படக் செய்யும். பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும்.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!

ஆண்களுக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்களை அறியாமலேயே விந்து வெளியேறும். இப்படி விந்து வெளியேறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், எப்போதும் உடலுறவு குறித்த எண்ணத்துடன் இருப்பது என்று சொல்வார்கள்.

உங்க இதய ரேகை உங்கள பத்தி என்ன சொல்லுத்துன்னு பாக்கலாமா?

அனைவரது கைரேகையும் வெவ்வேறு மாதிரி தான் இருக்கும் என நாம் யாரும் அறிந்தது தான். ரேகைகளில் சிலவன மிக முக்கியமானதாக திகழ்கின்றன. தன ரேகை, ஆயுள் ரேகை, இதய ரேகை மற்றும் திருமண ரேகை போன்றவற்றை வைத்து ஒருவரது இல்லறம், ஆரோக்கியம், செல்வம் போன்றவை எப்படி அமையும் என கூற முடியும்.

புதன், 20 ஏப்ரல், 2016

மூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

குதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான பராமரிப்பைக் கொடுத்தால், அதனால் நிலைமை தீவிரமாகி இரத்தக்கசிவு, கடுமையான வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், 15 நாட்களுக்கு ஒருமுறை பெடிக்யூர் செய்ய வேண்டும்.

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள்.

நமது கல்லீரலை செயலிழக்கச் செய்யும் சில மோசமான காரியங்கள்!

உடலிலேலே மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. அதில் உடலின் மெட்டபாலிசம், செரிமானம், டாக்ஸின்களை வெளியேற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தகைய கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது.

திங்கள், 18 ஏப்ரல், 2016

வினோதமான விளம்பரம்

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் பத்துலட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.

புதின் புகழ் பாடும் ரஷ்ய ஹோட்டலில்… டாய்லெட் பேப்பரில் ஒபாமாவின் போட்டோ.!

ரஷ்யாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவறையில் ‘டாய்லெட் பேப்பரில்’அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)

எமது பொறுப்பாளர் ஒருநாள் என்னை அழைத்து “நான் உங்களை ஒரு கிராம வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பாக அனுப்பப் போகிறேன். அங்கு உங்களுடன் இன்னொரு உறுப்பினர் மட்டும் இருப்பார் என்று கூறி எனக்கு அந்த வேலையைப் பற்றி விளங்கப்படுத்தினார்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஈபேயில் (Ebay) விற்பனைக்கு விடப்பட்ட நவாஸ் ஷெரீப்

ஆரம்ப விலை 62 இலட்சம் ரூபா

 பிரபல வணிக இணையத்தளத்தில் ( eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய சூப்பர் குட்டி ஹீரோ (வீடியோ)

சீனாவில் தெருவோரக்கடை வைத்திருந்த பாட்டியை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக குட்டிப்பையன் ஒருவன் ஹீரோவாக மாறி அசத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆணிடம் உறவுக்கு கெஞ்சிய பெண்: வைரலாகும் வீடியோ

சீனாவில் பெண் ஒருவர் குடிபோதையில் நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆண் ஒருவரிடம் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரும்புக்கரம்- இளவரசர் வில்லியமின் கையில் மோடியின் கைத்தடம் (காணொளி இணைப்பு)

டெல்லி வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியமுடன் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கினார். அதன் பிறகு வில்லியமின் கையில் மோடியின் கைத்தடம் பதிந்துவிட்டது.

வியாழன், 14 ஏப்ரல், 2016

தலைவரை முதன்முதலாக சந்தித்தோம்: “அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -11)

இயக்கத்தில் சேர்ந்த பிற்பாடு இயக்கத்தின் கட்டுப்பாடுகள்.

• “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.
• இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.”

• இயக்கத்தில் சேர்ந்த பின்னர் சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது.

திங்கள், 11 ஏப்ரல், 2016

இந்திய படைகளுடன் தொடங்கியது போர்!: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)

• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.

• இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வெங்கடாசலபதி முஸ்லிம் பெண்களுக்கு ஆசீா்வாதம் வழங்கும் உலக அதிசயம்-(படங்கள்)


இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.

ஜேர்மனியில் வாகன விபத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவர் பலி! -(படங்கள்)

ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

எம்ஜிஆர் 100 | 32 - 34

‘தெய்வத்தாய்’ பட பூஜைக்கு வரும் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

எம்ஜிஆர் 100 | 29 - 31


அரசு விழாவில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார். அருகே எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆர் 100 | 27 - 28

அரசு விழா ஒன்றில் பெண்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவிகள் வழங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!

M.G.R. மனிதரை மனிதராக மதித்து நேசிப்பாரே தவிர, அவரது வாழ்க்கைத் தரம் என்ன? எந்த பதவியில் இருக்கிறார்? என்றெல்லாம் பார்த்து மரியாதை செய்ய மாட்டார். முக்தா சீனிவாசன் ஒருமுறை கூறியது போல, முதல் நாள் எம்.ஜி.ஆரின் காரில் ராஜீவ் காந்தியை பார்க்கலாம்; அடுத்த நாள் அதே காரில் ஒரு லைட் பாய் எம்.ஜி.ஆருடன் சென்று கொண்டிருப்பார். கடைநிலை ஊழியராக இருந்தால்கூட, அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் எம்.ஜி.ஆர். மரியாதை அளிப்பார்.

எம்ஜிஆர் 100 | 23 - 26


‘இதயக்கனி’ படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் வாலி, நடிகைகள் லதா, ராதா சலூஜா. நிற்பவர்களில் இடது ஓரம் நடிகர் கோபாலகிருஷ்ணன், நடிகரும் முன்னாள் அமைச்சருமான திருச்சி சவுந்திரராஜன் (உயரமாக இருப்பவர்).

எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!

M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.

எம்ஜிஆர் 100 | 20 - 22

சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். பரிமாறுகிறார்.

 எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

எம்ஜிஆர் 100 | 16 - 19

‘ஒளிவிளக்கு’ படத்தில் ஸ்டைலான எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!

M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்ஜிஆர் 100 | 12 - 15


‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் சின்னப்பா தேவர்.

எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.

சனி, 9 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 9 - 11

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகி கக்கனை முதல்வர் எம்.ஜி.ஆர். அன்புடன் நலம் விசாரிக்கிறார்.உடன் காளிமுத்து. பாலகுருவா ரெட்டியார்.

எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி

M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

எம்ஜிஆர் 100 | 6 - 8

காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல