வெள்ளி, 3 டிசம்பர், 2010

மீசாலைப் பகுதியில் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படைச்சிப்பாய் ஒருவரை இந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து படைச்சிப்பாய்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த பொதுமகனின் சடலம் அதே இடத்திலேயே காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை குறித்த மனநோயாளியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிப்பாய் ஒருவர் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல