ஆசிரியருடன் மாணவர்களும்
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மரினெட்டே என்ற நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாலை 3 மணிக்கு பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்பாக ஒரு மாணவன் அந்த பள்ளிக்கூடத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் ஒரு வகுப்பு அறையில் இருந்த 23 மாணவர்களையும், அவர்களது ஆசிரியரான பெண்ணையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தான்.
அவர்கள் யாரும் வகுப்பு அறையை விட்டு வெளியேறக்கூடாது என்று எச்சரித்தான். பிறகு வகுப்பு ஆசிரியர் மூலமாக அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை போலீசுக்கு தெரியப்படுத்தினான்.
அதே பள்ளிக்கூடத்தில் படிப்பவன்
அதன் பிறகு தான் போலீசார் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர். பின்னர் 7 மணி அளவில் 40 பேர் கொண்ட போலீசார் குழு பள்ளிக்கூடத்துக்கு விரைந்தது.
அதன்பிறகு தான் அந்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பு அறையில் படிக்கும் மாணவன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவன் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். ஆசிரியையும் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களும், அந்த மாணவனுக்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான்
கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகி விட்டபோதிலும் இந்த பிரசினையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 5 மாணவர்கள் பாத்ரூம் செல்ல அவனிடம் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அவன் அனுமதி கொடுத்தான். அப்போது போலீசார் கதவை உடைத்து வகுப்பு அறைக்குள் நுழைந்தனர்.
வகுப்பு அறை வாசலில் அந்த மாணவன் துப்பாக்கியுடன் நின்று இருந்தான். போலீசார் அவனை குறி பார்த்தபடி, சரண் அடையும்படி கோரினார்கள். உடனே அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்.
விடுதலைஇதில் பலத்த காயம் அடைந்த அவன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆசிரியரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.
இந்த சிறைப்பிடிப்பு சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவன் என்ன கோரிக்கை வைத்தான் என்பதும் தெரியவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக