வெள்ளி, 3 டிசம்பர், 2010

அழகுக்காக ஆபரேஷன் செய்தபோது சீன பாடகி மரணம்

சீனாவை சேர்ந்தவர் வாங்க் பெய். 24 வயதான இவர் பாப் பாடகி ஆவார். இவர் சூப்பர் கேர்ல் பட்டத்துக்கான போட்டியில் பங்கு பெற்றவர். இவர் தன் முக அழகை அதிகப்படுத்தி கொள்வதற்காக ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்டார். ஹூபே மாநில தலைநகரான வூகான்னில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது.

அப்போது மயக்க மருந்து கொடுத்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் இதில் மரணம் அடைந்தார்.

சீனாவில் அழகுக்காக ஆபரேஷன் செய்து கொள்வது அதிகம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் இந்த ஆபரேஷனை செய்து கொள்கிறார்கள். இந்த ஆபரேஷனில் வாங்க் பெய் இறந்து போனது அந்த நாட்டில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல