வெள்ளி, 3 டிசம்பர், 2010

மீண்டும் தமிழில் நடிக்க ஆசை

'ஆய்த எழுத்து'க்கு பின் மீண்டும் தமிழில் நடிக்க விருப்பமாக உள்ளதாக இந்தி நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் இஷா தியோல். அதன் பிறகு இந்தியில் பிசியாக விட்டார். ஆனால் அவருக்கு கைவசம் படங்கள் ஏதும் இல்லை. தென் மாநில நடிகைகள் இந்தி படத்திற்கு செல்ல விரும்புவதால், இஷா தியோல் போன்றவர்களுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி வருவதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல