கேரி ஸ்டீவர்ட் (50)
அனுமதியின்றி தன் உடலைத் தொட்ட நண்பரை தீயிட்டி கொளுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரி அனெ மெக்நிவன் (43) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான கேரி ஸ்டீவர்ட் (50) மெக்நிவனின் உடலை அவரது அனுமதியின்றி அங்கும் இங்கும் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். அதனால் கோபமடைந்த அவர் ஸ்டீவர்டை தாக்கி பெட்ரோல் ஊற்று தீயிட்டு கொளுத்தியுள்ளார். தீயில் உடலின் பெரும்பகுதி எரிந்து விட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீவர்ட் டிசம்பர் 10ம் தேதி இறந்தார்.
மெக்நிவன் உடல் ரீதியாக பலமுறை ஸ்டீவர்டால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சட்டத்துக்கு புறம்பாக கொலை செய்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மேக்நிவன் புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக