சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
பாகற்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்இ கசப்பு காணாமல் போய்விடும்.
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
எலுமிச்சை தேங்காய் புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையாகவும் இருக்கும்.
கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து போட்டு திரிச்சால் சப்பாத்தியோ, பூரியோ...எதுவானாலும் சுவை - வசனை - சத்து மூணும் அதிகப்படியாகும்.
புதுசா வாங்கின அரிசி, வடிக்கும் போது குழைஞ்சிடுதா?அரை மூடி எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்குங்க. பொல, பொலன்னு இருக்கும்.
கத்திரிக்கா, கூட்டோ, பொரியலோ, எது செஞ்சாலும் கொஞ்சம் கடலை மாவை தூவி சில நிமிடம் கழித்து இறக்குங்க. மணம் கம, கமன்னு இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் மீது ஐஸ் கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும், அதனை பாலிதின் கவரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கும் வைத்துக் கொள்ளலாம்.
பச்சை நிறக் காய்களை சமைக்கும்போது, தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் போட்டு பின்னர் காய்களைப் சேர்த்து வதக்கினால் அதன் பச்சை நிறம் மாறாது.
கீர் செய்யும் போது பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, வாணலியில் முதலில் சர்க்கரையை கரையவிட்டு பின்னர் பாலை ஊற்றினால் பால் எளிதாக கெட்டியாகும்.
ப்ரீசரில் ஐஸ் ட்ரே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க, முதலில் ஐஸ் ட்ரேயின் அடியில் சிறிது கிளிசரின் தடவிய பின் ப்ரீசரில் வைக்கலாம்.
சில பயனுள்ள தகவல்கள்
1.பாயசத்துக்கு முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை கூடும்.
2.தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும் மிக நல்லது.
3.பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும்
சமையல் சமாச்சாரங்கள்
1.சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம். பிரச்சனை தீர்ந்துவிடும்.
2.பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம். ருசியாகவும் காணப்படும்.
3.கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.
சமைக்க சில குறிப்புகள்
1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.
2.ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.
3.சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
சமையலில் சிறக்க
1.தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.
2.பூரி நமத்து போகாமல் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
3.சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்
கண்ணீர் வேண்டாம்
1.எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பாதியாக நறுக்கி நீரில் போட்டுவிட்டு பின்னர் நறுக்குங்கள். அழுகை குறையும்.
2.கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
3.இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இட்லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்
ஆரோக்கிய சமையல் Tips
* காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து சேர்த்துக்கொள்ளுங்கள் சத்துக்கும் சத்து; சுவைக்கும் சுவை!
* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்களை அரைத்தும், ஒரு ஸ்பூன் சீரகத்தைப் பொடித்தும் போட்டு பஜ்ஜி செய்தால், பஜ்ஜி நல்ல சுவையுடனும் இருக்கும். கடலை மாவினால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்படாமல் தடுக்கும்.
* மோர்க் குழம்பு செய்ய சமான்களை வறுத்துவிட்டு, தேங்காய்க்குப் பதிலாக பச்சையாகவே துளி கசகசாவை போட்டு அரைத்து மோர்க்குழம்பு செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். தேங்காய் போடாததால் கொலஸ்ட்ரால் குறையும். கசகசா போடுவதால் வயிற்றுக்கு குளுமை.
* உளுந்து - அரை கப், அரிசி - கால் கப், சிறிது வெந்தயம் இவைகளை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்வரகு மாவுடன் கலந்து மறுநாள் காலை தோசை வார்க்கவும். சத்தான, சுவையான தோசை தயார்.
* துவரம் பருப்புத் துவையல் தயார் செய்யும்போது, சிறிது கொள்ளினையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
* சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தயப் பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.
* எந்த வகை கீரையானாலும் அதைச் சமைக்கும்போது அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சமைத்தால்,கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
* வெந்தயத்தைக் கறுப்பாக வறுத்துத் தூள் செய்து காப்பிப் பொடியில் கலந்து காப்பிப் போட்டுக் குடித்தால் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு நல்லது.
* இரண்டு மிளகு, அரை ஸ்பூன் தனியா - தூள் செய்து தேநீர் கொதித்து வரும்போது தூவி இறக்கி வடிகட்டி சர்க்கரை கலந்து சாப்பிட உடம்புக்கொரு ஊட்டச்சத்து கிடைத்து களைப்பு நீங்கும்.
* மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் உறையாது. உறையூற்றும்போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்திரத்தையும் கவிழ்த்து மூடிவிட்டால் விரைவில் உறைந்துவிடும்.
* மிக்ஸியில் மாவு அரைக்கும்போது அது எளிதில் சூடாகிவிடும். சூட்டைத் தணிக்க மாவில் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.
* ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
* குழந்தைகளின் நகங்களில் அழுக்குச் சேர விடக்கூடாது. நகத்தை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டுவதற்கு முன்பு குழந்தைகளின் விரல்களைத் தண்ணீர் முக்கித் துடைத்துவிட்டு, அதன் மேல் பவுடரைப் பூசினால் எதுவரை நகத்தை வெட்டலாம் என்பதைத் தெளிவாகக் காட்டும்.
* காரணமின்றி திடீரென வயிறு வலித்தால், இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தால் வலி பறந்துவிடும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக