திங்கள், 15 பிப்ரவரி, 2010

சமையல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.


சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.



சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.



தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.



உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.



கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.



ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.



தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.



பாகற்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்இ கசப்பு காணாமல் போய்விடும்.



இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.



தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.



மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.



பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.



வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.



தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.



எலுமிச்சை தேங்காய் புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.



உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.



தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.



துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.


வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையாகவும் இருக்கும்.



கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து போட்டு திரிச்சால் சப்பாத்தியோ, பூரியோ...எதுவானாலும் சுவை - வசனை - சத்து மூணும் அதிகப்படியாகும்.



புதுசா வாங்கின அரிசி, வடிக்கும் போது குழைஞ்சிடுதா?அரை மூடி எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்குங்க. பொல, பொலன்னு இருக்கும்.



கத்திரிக்கா, கூட்டோ, பொரியலோ, எது செஞ்சாலும் கொஞ்சம் கடலை மாவை தூவி சில நிமிடம் கழித்து இறக்குங்க. மணம் கம, கமன்னு இருக்கும்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் மீது ஐஸ் கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும், அதனை பாலிதின் கவரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கும் வைத்துக் கொள்ளலாம்.

பச்சை நிறக் காய்களை சமைக்கும்போது, தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் போட்டு பின்னர் காய்களைப் சேர்த்து வதக்கினால் அதன் பச்சை நிறம் மாறாது.

கீர் செய்யும் போது பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, வாணலியில் முதலில் சர்க்கரையை கரையவிட்டு பின்னர் பாலை ஊற்றினால் பால் எளிதாக கெட்டியாகும்.

ப்ரீசரில் ஐஸ் ட்ரே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க, முதலில் ஐஸ் ட்ரேயின் அடியில் சிறிது கிளிசரின் தடவிய பின் ப்ரீசரில் வைக்கலாம்.



‌சில பயனு‌ள்ள தகவ‌ல்க‌ள்

1.பாயச‌த்து‌க்கு முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை கூடும்.

2.தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும் மிக நல்லது.

3.பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும்


சமைய‌ல் சமா‌‌ச்சார‌ங்க‌ள்

1.சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம். பிரச்சனை தீர்ந்துவிடும்.

2.பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம். ருசியாகவும் காணப்படும்.

3.கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

‌சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்

1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.

2.ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

3.சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க

1.தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

2.பூரி நமத்து போகாமல் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

3.சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்

1.எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் நறுக்குங்கள். அழுகை குறையும்.

2.கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

3.இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்

ஆரோக்​கிய சமை​யல் Tips

* காய்​கறி சாலட் செய்​யும்​போது ஒரு கைப்​பிடி பாசிப் பருப்பை அரை​மணி நேரம் ஊற வைத்து சேர்த்​துக்​கொள்​ளுங்​கள் சத்​துக்​கும் சத்து;​ சுவைக்​கும் சுவை!​

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்​களை அரைத்​தும்,​​ ஒரு ஸ்பூன் சீர​கத்​தைப் பொடித்​தும் போட்டு பஜ்ஜி செய்​தால்,​​ பஜ்ஜி நல்ல சுவை​யு​ட​னும் இருக்​கும்.​ கடலை மாவி​னால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும்.​

* மோர்க் குழம்பு செய்ய சமான்​களை வறுத்​து​விட்டு,​​ தேங்​காய்க்​குப் பதி​லாக பச்​சை​யா​கவே துளி கச​க​சாவை போட்டு அரைத்து மோர்க்​கு​ழம்பு செய்து பாருங்​கள்.​ சுவை​யாக இருக்​கும்.​ தேங்​காய் போடா​த​தால் கொலஸ்ட்​ரால் குறை​யும்.​ கச​கசா போடு​வ​தால் வயிற்​றுக்கு குளுமை.​

* உளுந்து -​ அரை கப்,​​ அரிசி -​ கால் கப்,​​ சிறிது வெந்​த​யம் இவை​களை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்​வ​ரகு மாவு​டன் கலந்து மறு​நாள் காலை தோசை வார்க்​க​வும்.​ சத்​தான,​​ சுவை​யான தோசை தயார்.​

* துவ​ரம் பருப்​புத் துவை​யல் தயார் செய்​யும்​போது,​​ சிறிது கொள்​ளினை​யும் வறுத்​துச் சேர்த்து அரைத்​தால் சுவை​யும் மண​மும் கூடு​த​லாக இருக்​கும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* சாம்​பார்,​​ கீரை,​​ புளிப்பு கூட்டு போன்​ற​வற்​றைக் கொதித்து இறக்​கும் சம​யம் துளி வெந்​த​யப் பொடி தூவி இறக்​கி​னால் நல்ல வாச​னை​யாக இருக்​கும்.​ உட​லுக்​கும் ஆரோக்​கி​யம்.​

* எந்த வகை கீரை​யா​னா​லும் அதைச் சமைக்​கும்​போது அள​வுக்கு மீறி காரம்,​​ உப்பு,​​ புளி இவற்றைச் சேர்த்து சமைத்​தால்,​கீரை​யி​லுள்ள சத்​துக்​கள் முழு​மை​யாக கிடைக்​காது.​

* வெந்​த​யத்​தைக் கறுப்​பாக வறுத்​துத் தூள் செய்து காப்​பிப் பொடி​யில் கலந்து காப்​பிப் போட்​டுக் குடித்​தால் சர்க்​க​ரை வியா​தி​கா​ரர்​க​ளுக்கு நல்​லது.​

* இரண்டு மிளகு,​​ அரை ஸ்பூன் தனியா -​ தூள் செய்து தேநீர் கொதித்து வரும்​போது தூவி இறக்கி வடி​கட்டி சர்க்​கரை கலந்து சாப்​பிட உடம்​புக்​கொரு ஊட்​டச்​சத்து கிடைத்து களைப்பு நீங்​கும்.​

* மழை மற்​றும் குளிர் காலங்​க​ளில் தயிர் உறை​யாது.​ உறை​யூற்​றும்​போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்​தி​ரத்​தை​யும் கவிழ்த்து மூடி​விட்​டால் விரை​வில் உறைந்​து​வி​டும்.​

* மிக்​ஸி​யில் மாவு அரைக்​கும்​போது அது எளி​தில் சூடா​கி​வி​டும்.​ சூட்​டைத் தணிக்க ​ மாவில் ஐஸ் வாட்​டர் தெளித்து அரைக்​க​லாம்.​​

* ரத்​தக்​கறை படிந்த துணி​களை உப்​புக் கலந்த தண்​ணீ​ரில் சிறிது நேரம் ​ ஊற வைத்து துவைத்​தால் கறை​கள் நீங்​கி​வி​டும்.​

* குழந்​தை​க​ளின் நகங்​க​ளில் அழுக்​குச் சேர விடக்​கூ​டாது.​ நகத்தை வெட்​டி​விட வேண்​டும்.​ அப்​படி வெட்​டு​வ​தற்கு முன்பு குழந்​தை​க​ளின் விரல்​க​ளைத் தண்​ணீர் முக்​கித் துடைத்​து​விட்டு,​​ அதன் மேல் பவு​ட​ரைப் பூசி​னால் ​ எது​வரை நகத்தை வெட்​ட​லாம் என்​ப​தைத் தெளி​வா​கக் காட்​டும்.​

* கார​ண​மின்றி திடீ​ரென வயிறு வலித்​தால்,​​ இரண்டு ஸ்பூன் சர்க்​க​ரையை வாயில் போட்​டுக் கொண்டு தண்​ணீர் குடித்​தால் ​ வலி பறந்​து​வி​டும்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல