திங்கள், 15 பிப்ரவரி, 2010

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா...
தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...

* பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

* விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

* ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

* பிற ஆணுக்காகத் தூது செல்பவன்

* அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்

* உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

* அதிகத் துணிச்சல் உள்ளவன்

* ஒன்றக வளர்ந்தவன்...

* காம சாஸ்திரம் நன்கு கற்றவன்

* அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....

* இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

* மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...

* புதுமாப்பிள்ளை

* முதலாளியாக இருப்பவன்

* தாராள மனப்பான்மை உள்ளவன்

* ரகசியத்தை அறிந்தவன்

* அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

* பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல