திங்கள், 15 பிப்ரவரி, 2010

கோழி குருமா

தேவையான பொருட்கள் :


கோழி : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்,
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்உப்பு : தேவையான அளவு

தாளிக்க:

சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க:
சோம்பு : கால் ஸ்பூன்
தேங்காய் : அரை கப்
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5
கிராம்பு : இரண்டு
(இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல