ஆசனவாய்ப்புணர்ச்சி பெரும்பாலோரால் வெறுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமின்மை தான். தவிர, ஒரு வகையில் இது
இன்பத்தை அள்ளித் தந்தாலும் பல வழிகளில் இடையூறு இருப்பதுவும் இதற்கு ஒரு காரணம். ஆசனவாய்த் தசைகள், சுருக்குத் தசைகள், அவற்றை மிதமிஞ்சி விரிவாக்குவதன் மூலம் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக இதனால் தொற்று நோய்களும் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
எய்ட்ஸ் என்ற கொடிய ஆட்கொல்லி நோய் இதில் தோன்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வழவழப்பான பசைகள், எண்ணை போன்றவற்றைத் தடவுதல் ஓரளவு சுருக்குத் தசைகளுக்குப் பாதிப்பு நேராமல் தடுக்க முடியும். ஆனால் இதனால் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க முடியாது. இதில் இன்னொரு பெரிய ஆபத்தும் உண்டு. அதவாது, ஒருவர் ஆசன வாயில் உறவு கொண்டு விட்டு அப்படியே பெண்ணின் குறியில் உறவு கொண்டால், ஆசனவாயில் உள்ள தொற்றுநோய்க்கிருமிகள் குறியில் தொற்றி நோய்கள் ஏற்படுத்தும்.
இயற்கையான உறவு.....
ஆண்குறியும், பெண் குறியும் இணைந்து கொள்ளும் உறவு தான் இயற்கையானது. மற்றவை அனைத்தும் இயற்கைக்கு மாறானது தான். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு வகையான உணர்ச்சிகள், விருப்பு, வெறுப்புகள், மாறுபட்ட ரசனைகள் இருக்கும். இந்த அம்சங்கள் அதற்கேற்ற பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சில தம்பதிகள் செக்சில் ஈடுபடுவதற்கு முன் நன்றாகக் குளித்து விட்டு, வாய் வழிப்புணர்ச்சியில் (ஓரல்) ஈடுபடுவார்கள். இன்னும் சிலர் கருவுறுவதைத் தள்ளிப்போடும் வகையில் அப்படி ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலரோ, ஓரல் செக்ஸ் என்பது தன்னின மோகம் என வித்தியாசமாகச் சிந்துத்துப் பார்ப்பதும் உண்டு. தன்னின மோகிகள், வாய் வழிப்புணர்ச்சியில் தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். என்றாலும் அதே விஷயம் ஆண், பெண்ணிற்கு இடையே நடக்கும் போது அது எப்படி தன்னின மோகம் ஆகும்?
ஆசன வாய்ப்புணர்ச்சி....
பாலியல் நடத்தையின் போது ஆசன வாயைப் (ஆனல்) பல முறைகளில் தூண்ட முடியும். ஒரு வழி, விரலால் தூண்டுதல், இன்னொன்று வாய் இதழால் தூண்டுதல்,. நேரடியாக ஆசன வாயில் புணரவும் முடியும்,. இது தன்னின மோகிகள் இடையே பிரபலமாக விளங்கும் பாலுறவு முறை. சில சமயம் தம்பதிகளும் இந்தச் செயலில் இறங்குவதுண்டு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக