திங்கள், 15 பிப்ரவரி, 2010

காமசூத்திரம் கூறும், கலவியின் போது, தட்டுதல் அல்லது அடித்தல் முறை!

நகக்குறி, பற்குறிகள் பதிப்பதற்கு அடுத்தபடியாக தட்டுதல் என்ற முறை காமசூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கலவி என்பதே ஆண்-பெண்ணுக்கு இடையே நடக்கும் ஒரு சுகமான யுத்தம் தான். இதில் வலிகளும், துன்பங்களும் சுகமான சுமைகளாகவே இருவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இதில் கிடைக்கும் வலிக்கும், துன்பத்துக்கும் சிலர் தவம் வேண்டிக் கிடப்பார்கள். இது தான் இயற்கையின் மகிமை, வலிமை!!!

இந்தக் காத்துக் கிடத்தலை எந்தக் கோணத்திலும் கொச்சைப்படுத்தலாகாது. அப்படி யாராவது கொச்சைப்படுத்தினால் அது இயலாமை, அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு தான் என ஆணித்தரமாகச் சொல்லலாம்.

காம இச்சையின் பரிமாணத்தில் இரண்டு நிலைகளை காமசூத்திரம் விளக்குகிறது. அவை உள் உணர்வு, மற்றொன்று... செயல்முறை... கலவியின் போது ஒரு வகையில் பலவந்ததும் கையாளப்படுகிறது. இந்தச் செயலின் துணைச் செயல் தான் தட்டுதல் என காமசூத்திரம் கூறுகிறது. பிரஹனான (தட்டுதல், அடித்தல்) காம உணர்ச்சி அதிகரிக்கும் சமயத்தில் காதலன், காதலியின் உடலின் ஏதாவது பாகத்தில் தட்டுவான், அல்லது செல்லமாக அடிப்பான்... இது காதலில் இயற்கை.

இப்படி காதலன், காதலியின் உடலில் தட்டுவதற்கு ஏற்ற இடங்கள் ஏழு வகைப்படும் என காமசூத்திரம் வரையறுத்துள்ளது... அவை,

தலை, தோள்கள், மார்பகத்தின் நடுப்பகுதி, பிட்டம், தொடைகள், முதுகு மற்றும் விலாப்பகுதி,

தட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு பயன்படுத்தும் உடல் உறுப்புகள்!

பிரஸ்ரிக (உள்ளங்கை)
முஷ்டிக (முட்டி)
அபஹஸ்தக (புறங்கை)
சமதளக (நீட்டிய விரல்கள்)

இப்படி, நகக்குறி, பற்குறி பதித்தல், அடித்தல் அல்லது தட்டுதலை ஒரு அளவோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எல்லை மீறிப்போனால் காதலர்களுக்குள் மனக்கசப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம். எனவே காதலர்கள் இந்த விஷயத்தில் எல்லை மீறி நடக்காமல், நளினமாக, மென்மையாக, ஒரு உயர்ந்த ரசனையோடு அணுகினால் காதல் எப்போதும் தித்திக்கும்!!!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல