புதன், 1 டிசம்பர், 2010

பாகிஸ்தான் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி. 45 வயதான இவர் இஸ்லாம் மதத்தை அவமதித்தாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்தும் தனக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் கோரி ஆசியா பீவி ஜனாதிபதி சர்தாரிக்கு மனு செய்தார். இதை ஏற்று சர்தாரி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து, ஷாகீத் இக்பால் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இக்பாலின் வக்கீல் அல்லா பக்ஸ் லாகிரி வாதாடுகையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி இருப்பது சட்டவிரோதமானது என்று வாதாடினார்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு, சர்தாரிக்கு மன்னிப்பு அளிப்பதில் இருந்து தடை விதித்தது. தீர்ப்பில் கோர்ட்டு கூறி இருப்பதாவது:-

அந்த பெண்ணுக்கு எதிரான சாட்சியங்களை மதிப்பீடு செய்வது கோர்ட்டின் கடமை ஆகும். இது தனிநபரின் வேலை அல்ல. குற்றம்சாட்டப்பட்ட பெண் அப்பாவி என்று தெரியவந்தால் அவர் விடுவிக்கப்படுவார்.

இவ்வாறு கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல