வெள்ளி, 10 டிசம்பர், 2010

எண்களை எண்ணுவதை நிறுத்த முடியாது துன்பப்படும் சிறுமி

எப்போதும் எண்களை எண்ணிக்கொண்டிருப்பதை நிறுத்த முடியாத விநோத பாதிப்பிற்கு ஆளாகி பிரித்தானியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் துன்பப்பட்டுவருகிறார்.

டெவன் நகரிலுள்ள தெய்கன்மவுத் எனும் இடத்தைச் சேர்ந்த சூஸனா ஒஸ்போம் என்ற இந்தச் சிறுமி, சில எண்களை (எண் 3 உட்பட சில எண்கள்) தீய எண்களாக கருதி, அவற்றைத் தவிர்த்து ஏனைய எண்களை எண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உளவியல் ரீதியான பாதிப்பு ஒன்றுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

சூஸனா ஒஸ்போமின் எண்களை தொடர்ந்து எண்ணும் பழக்கத்தால் அவருடன் குடும்பத்திலுள்ளவர்களும் ஏனையவர்களும் பேசுவதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

சூஸனா ஒஸ்போமிற்க்கு தற்போது தெருவில் இறந்து கிடக்கும் மிருகங்களுக்காக பிரார்த்திக்கும் புதிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சூஸனா ஒஸ்போமின் தாயாரான மிராஸா லின்ட் (41 வயது) விபரிக்கையில், ““சூஸனாவின் இந்த விநோத பழக்கம் எமது குடும்பத்தையே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது'' என்று தெரிவித்தார்.

அவருக்கு சூஸனா ஒஸ்போமை தவிர இரு மகன்மார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல