திங்கட்கிழமை பின்னிரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் புதன்கிழமை சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஷெபோய்கன் நகரைச் சேர்ந்த 57 வயதான மேற்படி பெண், முத்தமிடுகையில் தனது கணவன் (79வயது) நாக்கை கடித்து துண்டாக்கியதையடுத்து அவசரசேவை பிரிவிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அவசர சேவைப் பிரிவினர் வந்தபோது உடையெங்கும் இரத்தக்கறையுடன் அந்த பெண் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கடித்து துண்டாடப்பட்ட நாக்கின் பகுதியை இணைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக