வெள்ளி, 10 டிசம்பர், 2010

இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணை சித்திரவதை செய்த கட்டார் எஜமானுக்கு அபராதம்!

இலங்கை வீட்டுப் பணிப் பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய கட்டார் எஜமானுக்கு அந்நாட்டு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

வீட்டுப் பணிப் ஒருவரை குறித்த கட்டார் எஜமானர் தீயால் சுட்டு துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உட்பட்ட பெண்ணுக்கு 648,000 ரூபா நட்டஈடாக வழங்குமாறு கட்டார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சித்திரவதைக்கு ஆளான பெண் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். கடந்த மாதம் 30ம் திகதி கட்டார் எஜமானர், தமது கையை தீயால் சுட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கான இரண்டாண்டுகால சம்பளம் நட்ட ஈடாக வழங்கப்பட்டதுடன், நாடு திரும்புவதற்கான விமான டிக்கட்டையும் எஜமானர் வழங்க வேண்டுமென கட்டார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல