வெள்ளி, 10 டிசம்பர், 2010

சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்

இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் அமித் குமார். சிறுநீரக சிகிச்சையில் நிபுணரான இவர் பல தொழிலாளிகளின் சிறுநீரகங்களை திருடி வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தினார்.

இதன் மூலமாக அவர் பெரும் பணம் சம்பாதித்தார். இந்த பணத்தில் அவர் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கி குவித்தார். சன்பரி என்ற இடத்திலும் 2006-ம் ஆண்டு அவர் நிலம் வாங்கினார்.

இவர் 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி இந்திய அரசு ஆஸ்திரேலியாவை கேட்டுக் கொண்டது. இதன்படி அவரது சன்பரி நிலம் பறிமுதல் செய்யப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல