வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிற‌ை

அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவதூறு வார்த்தையால் வர்ணித்து கவிதை எழுதியவருக்கு லூயிஸ்வில்லி மாவட்ட ‌கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரைச் சேர்ந்தவர் ஜானி லோகான் ஸ்பென்சர் (28) இவர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தினைச் சேர்‌ந்தவர்.

இவர் தனது தி ஸ்னிப்பர் எனும் தலைப்பில் அதிபர் ஒபாமாவை மிரட்டியும், அவதூறு வார்த்தைகளை உபயோகித்தும் பாடல் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின் இதனை கடந்த 2007-ம் ஆண்டு இணையதளத்திலும் வெளியிட்டார்.

பின் கடந்த 2009-ம் ஆண்டிலும் வெளியிட்டார். இதற்காக லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் இவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனைவிதித்து லூயிஸ்வில்லி மாவட்ட நீதிபதி ‌‌‌‌ஜோஸப் எச். மெக்கன்லி தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்ற ஜானி லோகான் ஸ்பென்சர் கூறுகையில், எனது தாய் இறந்ததால் துக்கம் தாங்காமல் போதை மருந்த பழக்கத்திற்கு அடிமையானேன். ஒபாமாவை அவதூறாக பாடல் எழுதியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ‌என்றார்.

அவர் எழுதிய அந்த நாலு வரி கவிதை இதுதான்

"The Sniper,"


"The bullet that he has chambered is one of the purest pride,
And the inspiration on the casing reads DIE negro DIE,"
"The bullet screams toward its mark bringing with it death,
and where there was once a face there is nothing left..."

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல