நான் எளிய உடையை உடுத்துகிறேன்.
எளிய உணவை உண்கிறேன். மொத்தத்தில் எளிய வாழ்க்கையை வாழ்கிறேன்.
எனது சொத்து 10 மில்லியனுக்கு மேற்பட்டால் சமுக பொறுப்பு அதிகரிப்பதை நான் உணர்கிறேன் என கூறுகிறார் “கியூ ஹோப் குரூப்' பின் தலைவரும் பெரும் செல்வந்தருமான லீயூ யங்காவோ.
அவர் கடந்த 10 வருடங்களில் மேற்கத்திய கிராமப்புறங்களில் ஐந்து மில்லியனை முதலீடு செய்துள்ளார். அதே வேளை அடுத்த ஐந்து வருடங்களில் மேற்கில் 10 மில்லியன் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். அதன் பயனாக பல விவசாயிகள் தொழில் பெறுவார்கள். நம்பிக்கை வளர்ப்பதுமட்டுமல்ல, சுயகௌரவத்தையும் பெறுவார்கள். பட்டண மக்கள் அவர்களது உற்பத்திப்பொருட்களாகிய இறைச்சி, முட்டை மற்றும் பால் போன்ற உணவு வகைகளை பெற்று மகிழ்ச்சியடைவார்கள். லியூ யங்காவோ, 16 வயதாக இருக்கும் போது வந்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் விரும்பி உண்பார். பின்பு ஆசியராகிய வேளை இருதடவை சமைக்கப் பட்ட பன்றி இறைச்சியை விரும்பி உண்பார். இந்தப் பழக்கத்திலிருந்து அவர் இன்றுவரை மாறுபடவில்லை. நான் உலகம் பூராகவும் பயணம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்ணும் பல வகை உணவுகளையும் பார்த்திருக்கிறேன். இருப்பினும் நான் எனது வழமையான உணவிலிருந்து என்றுமே மாறவில்லை என்கிறார் லீயூ யங்காவோ.
10 வருடங்களில் அவசர தலைக்கேசம் பெரிதும் மாற்றமடைந்துவிட்டது. அவருக்குப் பிடிக்காதது சிகை அலங்காரம்.
நாங்கள் செழிப்பாக இருக்கவில்லை.
வர்த்தகத்திலுள்ள கஷ்டங்களையும் கடின உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். எங்களது ஸ்தாபனம் ஆதரவில் இயங்குகிறது. எங்கள் இலக்கு நூறு வருட நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாகும் என்றார் லியூ. அவர் ஓர் அனுபவ பூர்வமான மனிதர். ஆடம்பர வார்த்தைகளை அள்ளிவீச மாட்டார். நன் மதிப்பை இழக்கமாட்டார். அவர் குடிப்பதில்லை.
புகைப்பதில்லை, காட்ஸ் விளையாட மாட்டார். மேலும் உணவு, உடை மற்றும் செலவுகளுக்கு நாளொன்றுக்கு 100 யென்னுக்கு மேல் செலவு செய்ய மாட்டார். தொழிலாளர்களுடன் மிக நெருக்கமாக அன்யோன்யமாக பழகுவார்.
அவர்களுடன் தொழிலாளர்களின் சிற்றுண்டிச் சாலையில் உணவு அருந்துவார். அவர்களது கழிப்பறையை பகிர்ந்து கொள்வார். அதிகம் விருந்து பசாரங்களில் கலந்து கொள்ள விருப்புவதில்லை.
2000 இல் ஹனன் செய்மதி தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரும் செல்வந்தர் பங்கு பற்றிய செவ்வி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழில் அதிபர் சாங்சிங்மின் அவர்களை நிருபர் நீங்கள் அணிந்திருக்கும் சப்பாத்தின் விலை எவ்வளவு? அதன் வியாபாரக்குறி என்ன? என்று வினாவிய போது அவர் இது முதலைத்தோலில் செய்த அதி விலையுயர்ந்த சம்பாத்து. 8000 டொலர் பெறுமதியானது என பதில் பகன்றார். அதே கேள்வியை லீயூ யங் காவோ அவர்களிடம் முன்வைத்த போது லியூ புன்னகைத்துக் கொண்டு இது என்ன வர்த்தக குறிச் சப்பாத்து என எனக்குத் தெரியாது .இது கம்பனிச் செலவில் வாங்கியது. 100டொலர்களுக்கு மேல் இருக்காது என பதில் அளித்தார்.
அவர் மிக எளிய வாழ்க்கை நிறைவுடன் வாழ்ந்த பெரும் செல்வந்தர். அவரது பல வெற்றிகளே கம்பனியை விழ விடாது தூக்கி நிறுத்தியிருக்கிறது. உயர் முதலாளித்துவ உணர்வை பேணி வந்திருக்கிறது. இதுவே முடிவில்லாத போராட்டத்திற்கு மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
அவர் தனது தொழிலாளர்களுக்கு தனது இளமை வறுமையையும் தற்போதைய வாழ்க்கையையும் விபரமாக எடுத்துக் கூறி, ஊதாத்தனம் எவ்வாறு சிக்கனத்தை இழக்கச் செய்கிறது என விளக்கம் செய்வார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக