செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வீட்டை விட்டு வெளியேறிய 274 கிலோ குண்டுப்பெண்

தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 கிலா. மிகவும் பெரிதாக இருப்பதால், கடந்த 3 ஆண்டாக இவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை.

ஆணி அறைந்த மாதிரி கேள்வி கேட்கும் சவூதித் தூதரகம்!

சவூதி அரேபியாவில் எஜமானிய தம்பதியரால் இலங்கைப் பணிப் பெண்ணான ரி.ஆரியவதி உடலின் பல பாகங்களிலும் ஆணிகளால் அறையப்பட்டார் என்கிற சம்பவம் தொடர்பாக புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பெண்ணின் உடலில் ஆணி செலுத்திய சவூதி தம்பதியர் கைது

இலங்கைப் பணிப் பெண்ணான ஆரியவதியின் உடலில் ஆணி செலுத்தி துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 அடி 5 அங்குல உயர இராட்சத மாடு

பிரித்தானிய கிங்ஸ்வூட் பிராந்தியத்திலுள்ள பண்ணையொன்றில் வாழும் 6 அடி 5 அங்குல உயரம் மூக்கிலிருந்து வால்வரை 14 அடி நீளம் 1.2 தொன் நிறையும் கொண்ட இராட்சத மாடொன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமரிக்கும் வாலில்லா குரங்கு

அமெரிக்க தென் கரோலினா மாநிலத்திலுள்ள வன உயிரின பூங்காவில் வாழும் வாலில்லா குரங்கொன்று இரு சிங்கக் குட்டிகளை தாய்க்குத் தாயாக அரவணைத்து பராமரித்து வருகிறது.
4 வயதான ஹனாமா என்ற மேற்படி குரங்கு, சுகுஸா மற்றும் சிம்ஹ் என்ற 6 வார வயதான இந்த சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமப்பதுடன் அக்குட்டிகளுக்கு வேடிக்கை காட்டி உற்சாகப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரசார நிதியை அதிகரித்துக் கொள்ள மார்பக பிளாஸ்ரிக் சிகிச்சை

வெனிசுலா அரசியல்வாதியொருவர் தனது பிரசார நடவடிக்கை களுக்கான நிதியை அதிகரிக்க விநோத வழிமுறையொன்றை கையாண்டுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் சிலர் (Video)

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஒரு ரோஜாவின் கதை

இலங்கையோடு ஒப்பிடும் போது தமிழக அரவாணிகள் எவ்வளவோ சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அரவாணிகள் என அழைக்கப்படும் திருநங்கையருக்கு இன்றைய தமிழக அரசு ஆதரவாக இருந்து வருகிறது. கலைஞர் டி.வி. அமெரிக்காவில் கல்வி கற்று திரும்பி வந்த திருநங்கையான ரோசுக்கு ‘இது ரோஸ் நேரம்’ என்ற ‘டோக் ஷோ’வை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த ரோஜாவைப் பற்றிய கதை இது.

சவூதியிலிருந்து ஆணிகளுடன் வந்த ஆரியவதி

ஆஸ்பத்திரியில் ஆரியவதி

நாகரிகம் வளர்ச்சியடைந்து மனிதன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளான். மனிதப் பண்புகள் மேலோங்கி விட்டதாக பெருமையாகக் கூறப்படுகிறது. இதனால் பிராணிகளை வதைப்பதைத் தடுக்கவும் கூட பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின் மீது கைவைத்தால் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் புரட்டி எடுத்து விடுகின்றன. ஆனால் மிருகங்களை விடக் கேவலமாக மனிதர்கள் நடத்தப்படும் அவலம் மற்றொரு பக்கமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

அதற்கு சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி சிறந்த உதாரணமாகும்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

Fidel Castro: bin Laden is a CIA agent

Claims al-Qaida leader used by Bush to create fear


AP


Friday, August 27, 2010




In this photo released by the state media Cubadebate web site, Fidel Castro meets with author Daniel Estulin, not shown, in Havana, Cuba, yesterday. (AP Photo/Alex Castro, Cubadebate)


HAVANA, Cuba — Fidel Castro says al-Qaida leader Osama bin Laden is a bought-and-paid-for CIA agent who always popped up when former President George W Bush needed to scare the world, arguing that documents recently posted on the Internet prove it.

விடியலைத்தேடி வெளிநாடு செல்லும் வீட்டு பணிப்பெண்கள் வாழ்க்கை இன்னும் இருளில்

உடலில் 23 ஆணிகளுடன் சவூதியிலிருந்து நாடுதிரும்பிய பணிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்கவை மேற்கோள் காட்டி ஆங்கில இணையத்தளமொன்றில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த செய்தி பலருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

லெபனானில் இலங்கை பணிப் பெண் மாடியிலிருந்து விழுந்து மரணம்?

லெபனான் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சேவையாற்றிக் கொண்டிருந்த அநுராபுரம் சிராவஸ்திபுர பகுதி குடும்பப் பெண்ணொருவர் மாடிக்கட்டிடமொன் றிலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது பற்றி இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தமக்கு அறிவித்துள்ளதாக இப் பெண்ணின் தாய் ஆர். ஏ. சரோஜினி தெரிவித்தார்.

சித்திரவதைக்குள்ளான பெண்ணுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாக் கப்பட்டு இலங்கை வந்த பெண் நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் 4 மணிநேரம் சத்திர சிகிச்சைக்குள்ளாக் கப்பட்டார். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நேபாள‌ ப‌ள்ளிவாசல் ஒன்றுக்கு அல்லா நேர‌டியாக‌ உத‌வியுள்ளாராம் (வீடியோ இணைப்பு)

Allah's Help Miracle in Nepal Mosque




One Mosque was being constructing in Nepal. They need a crane to place the Dome on the Minaret of the Mosque. They ask for crane from Government but the Government refused and said "ask your Allah for help". In the night Maulvi saw a dream as Allah suggested him to cover dome with a white cloth, next day they did so. The people saw that Dome starts flying towards the Minaret and placed on the Minaret of the Mosque with the help of Allah.




"No one know that what is true or what is false
except Allah because he knows everything"

Watch this video

தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

தலையின் பின்புறம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான நபரொருவர், 5 வருடங்களாக தனது தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்திருப்பதை அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஆச்ச‌ர்ய‌மான‌ அறுவை

ஆர்ஜ‌ன்டினாவில் லோமாஸ் டி ஸமோரா (Lomas de Zamora) ந‌க‌ரில் உள்ள‌ கான்ட‌ல்போ (Gandulfo) ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ 54 வ‌ய‌துடைய‌ பெண்ணொருவ‌ரின் க‌ருப்பையிலிருந்து 23 கிலோ எடையுள்ள‌ க‌ட்டியை ம‌ருத்துவ‌ர்க‌ள் சென்ற‌ செவ்வாய்க்கிழ‌மை வெற்றிக‌ர‌மாக‌ அறுவைச் சிகிச்சை செய்து அக‌ற்றியுள்ள‌ன‌ர்.

கருணையின் வடிவம் அன்னை திரேசா

தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் அன்னை திரேசா ஆவார். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருப்பவர் அவர். அன்னையின் அன்பு கர‌த்தைப் பார்த்ததுமே பலர் அவரின் சீடராக மாறி அன்னையின் வழியில் சென்றுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் விசாவில் வந்து மலேசிய வீதிகளில் பிச்சையெடுக்கும் சீனர்கள்

மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் விசாவைப் பெற்றுவந்து வீதிகளில் பிச்சை யெடுத்து வரும் சீனக் குழுவொன்றை மலேசிய குடிவரவு அதிகாகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

ஹிட்லர் யூத-வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர்!

ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் யூத மற்றும் வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்று டி.என்.ஏ. சோதனைகளி்ல் தெரியவந்துள்ளது.

குதிஉயர்ந்த பாதணிகளின் அழகும் ஆபத்துகளும்

எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக  பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின்  அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

பாரமுல்லா மாவட்டத் தைச் சேர்ந்த 14 வயது வாமிக் ஃபாருக் குக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண். ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் நீல நிற யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான ஃபாரூக்கின் அப்பா வீட்டில் இல்லை. ஃபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெரும் சத்தம் வெளியே கேட்டது. மைசூனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது, அது துப்பாக்கிச் சூடு என்று. பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தார். அங்கே ஃபாரூக், தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான். ஒரே மகன் ஃபாரூக் அவர்களை விட்டுப் போய் விட்டான். இப்போது இந்திய ராணுவத்தை எதிர்த் துப் போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப் பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் அமர்ந்திருக்கிறார் மைசூன்.

அன்னை இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில்,அன்னை இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

அன்னை இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில், இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

சென்னை: கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் சமீபத்தில் கூறியுள்ள அனைத்தும் உளறல் பேச்சு… ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தை மேற்கோள் காட்டுகிறது சிங்கள இணையம்?

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்!

போனி வர்மா எனது நல்ல நண்பர் என்று சொல்லிவந்த" பிரகாஷ்ராஜ், இனி போனிவர்மா எனது மனைவி என்று சொல்லப்போகிறார். ஆம், நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் (ஆகஸ்ட் 24) திருமணம் நடைபெற்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்ரீதியாக செல்லும் பெண்கள்மீது பிரயோகிக்கப்படும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களும் சித்திரவதைகளும் முடிவின்றித் தொடருகின்றன. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக கடல் கடந்து அங்கு செல்கின்ற பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு இம்சைகளை எதிர்கொள்வதாக தகவல்கள் வந்தவண்ண முள்ளன. ஒருசில பெண்கள் உயிரற்ற பிணமாகவும் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

புதிய வாக்காளர் அட்டைகளில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக குறிப்பிடப்படவுள்ளதாக பங்களாதேஷ் தேர்தல் ஆணையகம் அறிவிப்புச் செய்துள்ளது.

அந்நாட்டில் 200,000 விபசாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய ரமழான் விளக்கை உருவாக்கி சாதனை

உலகிலேயே மிகப் பெரிய ரமழான் விளக்கை உருவாக்கி பாலஸ்தீன காஸா பிராந்தியத்தை சேர்ந்த நபரொருவர் செவ்வாய்க்கிழமை உலக சாதனை படைத்துள்ளார்.

பெண்ணாக மாறி மனைவியை மகளாக தத்தெடுத்த இந்திய பொலிஸ் உயரதிகாரி

பொலிஸ் உயரதிகாரியொருவர் பெண்ணாக மாறி தனது மனைவியை மகளாக தத்தெடுத்துக் கொண்ட விசித்திர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

உலோகப் பொருட்களை ஈர்க்கும் வல்லமையுடைய உடலைக் கொண்ட அபூர்வ பெண்மணி

இரும்புப் பொருட்களை கவர்ந்து இழுத்து வைத்துக் கொள்ளும் அபூர்வ காந்த மின்னேற்ற சக்தியைக் கொண்ட ஒருவராக பித்தானியாவைச் சேர்ந்த பிரெண்டா அலி ஸன் என்ற பெண் விளங்குகிறார்.

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் முகத்தை மூடி ஆடை அணியத் தடை அவுஸ்திரேலிய நீதிபதி உத்தரவு

மோசடி வழக்குகளில் ஆஜராகி சாட்சிய மளிக்கும் போது முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியக்கூடாது என அவுஸ்திரேலிய நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

நெற்றியில் சுத்தியல் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நபர்

நெற்றியில் சுத்தியலொன்று பாய்ந்த நிலையில் சுய உணர்வுடன் மருத்துவமனைக்கு வந்த நபரொருவர் மருத்துவர்களை திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவின் குவாங்ஸி (Guangxi) மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

போர் தின்ற நகரம் கிளிநொச்சி

எதிர்காலத்துக்கான கேளிவிக்குறியின் மீது படுத்துறங்கும் நிலையில் தமிழரின் வாழ்வு

கனடாவில் கரை இறங்கியவர்களின் கடிதம் "நேஷனல் போஸ்டின்" மனக்கதவை திறந்தது

நீங்கள் எந்த வகை தம்பதியர்?

“விவாகரத்து தான் ஒரே வழி' என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசிப் பேர் புது மணத் தம்பதியர். ஆண்டு தோறும் விவாகரத்து கணக்கு எகிறிக் கொண்டிருப்பதாய் சொல்கின்றன புள்ளி விவரங்கள்.

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்ப்டுகின்றன

துரோகி

மந்திரம் ஓதுகையில் தந்திரம்...?

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொணரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது.

மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கடல் பிராணி

சர்வதேச உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஒக்டோபஸ் ‘போல்’ கூறிய சரியான ஆருடத்தால் இன்றைக்கு ஒக்டோபஸ் இனமே பெருமை பெற்றிருக்கின்றது.

தமிழர் ஒருவரின் சுவாரஸ்யமான உரையாடல்

SRI LANKAN DIALOG CUSTOMER SERVICE best one

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

முதுகுவலிக்கு முறையற்ற இயக்கமே காரணம்

நம்முடைய எண்ணங்களை செயலாக்க வேண்டுமென்றால் நமது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும். உடலின் செயல் பாட்டில் நமது வேகத்தையும், தன்மையை யும் உறுதி செய்வது எலும்புகள். உடலில் உள்ள எந்த உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட் டாலும், நம்முடைய இயக்கம் பாதிக்காது. ஆனால் எலும்பு பாதிக்கப்பட்டால் மட்டும் நமது இயக்கம் முழுவதுமாக முடங்கிவிடும். இந்த நிலையில் நமது எலும்புகளில் இயற்கையாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்தும், இயற்கையற்ற முறையில் ஏற் படும் பிரச்சினைகள் குறித்தும் எம் மிடையே உள்ள சந்தேகங்களை வினாக் காளக்கி, விளக்கம் கேட்க, அதற்குரிய விடையை விரிவாக வழங்குகிறார், எலும்பு மருத்து வத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வரும், தமிழக நகரான திருநெல்வேலியில் இயங்கி வரும் அன்னை வேளாங்கண்ணி மருத்து வமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரான்சிஸ் ஏ.ராய். ""எலும்புகளில் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளில் ஒன்று, ஓஸ்டியோ பெரெசிஸ் என்கிற எலும்புக் கரைவு நோய். மற்றொ ன்று, அதிக எடை, உடற்பயிற்சி இல்லாதவ ர்க ளுக்கு வரக்கூடியது "எலும்புத் தேய்மா னம்' என்கிற பிரச்சினை. நடைப்பயிற்சியின் மையாலும், மேற்கத்திய கலாசார வாழ்க் கை முறையை கண்மூடித் தனமாக பின்பற் றுவதன் காரணமாகவும், தற்போது 4045 வயதிலே இந்த பிரச்சினை, அதிக மாக வர ஆரம்பித்துவிட்டது... '' என்று தம்மை நாடி வந்த நோயாளியிடம் விளக்கிக் கொண்டி ருந்த டாக்டர் பிரான்சிஸ் ஏ. ராயை சந்தித் தோம்.

குறைபாடுள்ள குழந்தைப்பிறப்பை தடுக்கலாம்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள் ளிட்ட தெற்காசிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் பெரும்பாலான பெண்கள், மகப் பேறு துறையினை தெரிவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. ""மேற்கத்திய தேசங்களை காட்டிலும் தெற்காசியர்களுக்கு குழந்தைகள் மீது தனி ஈடுபாடும், தணியாத ஆர்வமும் உண்டு. அத்துடன் குடும்பம் என்கிற சமூக அமைப்பின் மீதும் தெற்காசியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு'' என்று விளக்கமளிக்கிறார்கள் இத்துறையை தெரிவு செய்து, மகப்பேறு மருத்துவர்களாக செயல் படுபவர்கள். இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் படித்த மற்றும் படிக்காத இளம் தலைமுறையினருக்கு மாறிவரும் கால சூழலுக்கேற்ப குழந்தை பெற்றெடுப்பதில் ஏராளமான சந்தேகங்கள் இருந்து கொண்டே யிருக்கின்றன. இவர்களது தற்கால சந்தேகங்களுக்கு தமது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பதிலளிக்கிறார் டாக்டர் திருமதி. ஆக்னஸ்.

ஈரலின் (Liver) பணி என்ன?

உடலில் அதிகமாகப் பணிபுரியும் உறுப்புகளுள் ஈரலும் ஒன்று. வயிறு, குடல்கள், இதயம் அல்லது தசைகள் போன்று இது நெளிவதோ புரள்வதோ இல்லை. இதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை; ஈரல் உடலின் மிகப் பெரிய உள் உறுப்பாக விளங்குகிறது; இதன் எடை 2-3 பவுண்டுகளாகும். அடி வயிற்றின் மேல் வலப் பகுதியில் நிறைந்திருப்பது இது. உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.

கருப்பை கட்டிகள் !

பைவ்ரோயிட்(Fibroid) எனப்படும் கட்டிகள்

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?

இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத்தரிப்பது தடைசெய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை சத்திரசி கிச்சை செய்து கொள்கிறார்கள். கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்து விடுங்கள்.

புதன், 18 ஆகஸ்ட், 2010

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இந்திய விடுதலை 64 : வரலாற்று ஏடுகளிலிருந்து

சமூக சீர்திருத்தங்களுக்காக...

சாதிய - வகுப்புவாத பழக்கவழக்கங்களை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற வங்காள இந்துக்களின் வேட்கையும், அதனை சாதிப்பதற்காகத் துவக்கப்பட்ட இயக்கமும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கு இணையான இந்திய நிகழ்வுகளாகும். இந்த இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்தியவர்களில் புகழ்பெற்றவரான ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமூக சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல; முதலாளித்துவ தேசிய சித்தாந்தத்தின் மிகச்சிறந்த பிரதி நிதியுமாவார்.

சுதந்திரம்

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார். “இந்த நாடு எங்களுடையது. உம்முடையது அல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? - சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.

மேர்வினுக்குச் சனிமாற்றம் என்றால் மரத்தில் கட்டப்பட்டவருக்கு என்ன மாற்றம்?

அமைச்சுப் பதவியையும் கட்சியின் உறுப்பி னர் பதவியையும் இழந்த மேர்வின் சில்வா தனக்குச் சனி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே பதவியிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகள் பற்றிய சுவையான உண்மைத் தகவல்கள்

புலிகளின் பாதுகாப்புபற்றி சமீபகாலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை இதன் விளைவாக ‘கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ஒரு கேள்வி கூட வருகிறது.

மனிதனுக்கு உரோமம் மறைந்த கதை

செத்தபின் கூட பிரயோஜனமில்லாத மனிதத் தோலுக்கு உயிரோடு இருக்கும் போது உள்ள மதிப்பு வேறெதற்குமில்லை. சோப்புகள், சென்ட்டுகள், கிரீம்கள் என்று எத்தனை வகை அழகு சாதனங்கள் தோலுக்குத் தேவைப்படுகின்றன. இரண்டு வாரங்களில் தோலை வெளுப்பாக்குவோம் என்று உத்தரவாதம் தரும் கிரீம்களுக்கு பெண்களிடையே எத்தனை கிராக்கி! மனிதனின் தோலில் ரோமங்கள் இல்லாததால் தானே இத்தனை கூத்துக்களும்.

சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

சீனாவிலுள்ள உணவு விடுதியொன்று, சமையல் நிபுணர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விபரீதமான நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளது. ஒரு பெண்ணை மல்லாக்கப் படுக்க வைத்து, அப்பெண்ணின் வயிற்றில் பூசணிக்காயை வைத்து அதை கத்தியால் துண்டுகளாக வெட்டுமாறு சமையல் கலைஞர்கள் கோரப்பட்டனர்.

மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண்



உலகிலேயே மிகப்பெரிய மார்பகங்களுடன் காணப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஆணொருவர் சத்திர சிகிச்சைசெய்து மார்பகங்களை நீக்கியப்பின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மூன்று மாத பயண அனுபவத்துடன் 490 தமிழ் அகதிகள் கனடாவில்

கனடாவில் புகலிடம் தேடி “சன் சி' கப்பலில் புறப்பட்ட சுமார் 490 பேர் கடந்த வெள்ளியன்று கனேடிய நேரப்படி காலை 6.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சென்ற டைந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல