சனி, 20 நவம்பர், 2010

தாய்லாந்தில் கடந்த புதன்கிழமை 30 இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தாய்லாந்தின் சொங்க்லா பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, மொத்தமாக கைதுசெய்யப்பட்ட 50 பேரில் 30 தமிழர்களும் உள்ளடங்குவதாக த ஆசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் தற்போது பாங்கொக்கில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பின்னர் நாடுகடத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து தேசத்து குடிவரவு மற்றும் அடிப்படை சட்டங்களை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்வதற்குத் தயாராக இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கனடாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் வார்ட் எல்கொக், தாய்லாந்து அரச தரப்புடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் கீழேயே அண்மைக் காலமாக தாய்லாந்தில் வைத்து இலங்கையர்கள் கைதுசெய்யப்படுவதாக த ஆசியன் ட்ரிபியூன் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல