சனி, 20 நவம்பர், 2010

நேர்த்தி கடனை நிறைவேற்ற வந்த தம்பதி இராணுவ வாகனத்தில் மோதி பலி

நேர்த்தி கடனை நிறைவேற்ற வந்த தம்பதியினர் இராணுவ வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

யாழ், நல்லூரில் இருந்து முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு நேற்று மாலை நேர்த்திக் கடன் செலுத்த மோட்டார் சைக்கிள் வந்த தம்பதி இருவரும் எதிரே மாங்குளத்தில் இருந்து வந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதியுள்ளனர்.

இதன்போது தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், விபத்தில் காயமடைந்த எட்டு இராணுவத்தினர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லூர் செட்டித்தெருவைச் 52 வயதுடைய சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா மற்றும் மனைவி 48 வயதுடைய செல்வராஜா நகுலேஸ்வரி ஆகியோரே பலியாகியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல