சனி, 20 நவம்பர், 2010

லஸ்கர் இ தொய்பா மிக ஆபத்தான இயக்கம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் இயக்கம் லஸ்கர் இ தொய்பா. சமீப காலமாக அது அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்கம் பாகிஸ்தானில் சமூகசேவை செயல்களில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நிதி உதவி அளித்து வருகிறது. அதோடு இந்த இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

இந்த நிலையில் தான் இந்த இயக்கம் மிக மோசமான ஆபத்தான இயக்கம் என்று அமெரிக்க அதிகாரி டேனியல் பெஞ்சமின் தெரிவித்து இருக்கிறார்.

தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பாளரான டேனியல் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இயக்கம் மிக மோசமான ஆபத்தானது. இது சமூக சேவையில் ஈடுபடுவதாக கூறிக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதை வளரவிடக்கூடாது. அது நாட்டை அழிக்கவும் அனுமதிக்கவும் கூடாது. இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் எதிர்காலத்தில் எந்த ஒரு தாக்குதலிலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கவேண்டும். இதற்கு பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு டேனியல் பெஞ்சமின் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல