சனி, 31 அக்டோபர், 2015

எழுதமறந்த குறிப்புகள்- பதுங்கு குழிகளும் நிலக்கீழ் மாளிகைகளும்



வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது. உயிருக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது ஒவ்வொருவரும் தம்மைப்பாதுகாத்துக்கொள்ள இருப்பிடங்களைவிட்டு ஓடுவார்கள். முடியாதவர்கள், எங்காவது பதுங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் வட இலங்கையில் ஆயுத நெருக்கடி வந்ததும் பதுங்குகுழிகள் தோன்றின.

புலிகள் சரணடைய இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபாகரனுடன் குரோதமில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;

உதவிகோரல்

அக்­க­ரைப்­பற்றைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான கந்­த­சாமி சிறு­நீ­ரக நோயினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

கைதி­களின் விடு­தலை கானல் நீராகுமா?

அர­சியல் ரீதி­யான குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மும்­சரி, அவ­ச­ர­காலச் சட்­ட­மும்­சரி, அர­சியல் ரீதி­யான குற்றம் புரிந்­த­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டுள்­ளன. எனவே அத்­த­கைய சட்­டங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சியல் கைதிகள் அல்ல என்று கூறு­ப­வர்­களை எவ்­வாறு வகைப்­ப­டுத்­து­வது என்று தெரி­ய­வில்லை.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக, அர­சாங்கத் தரப்பில் இருப்­ப­வர்கள் ஆளா­ளுக்கு கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள். இந்தக் கருத்­துக்கள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு வித­மா­கவும், சில வேளை­களில் முரண்­பட்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இதனால், நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்­கி­டையில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று நாட்டின் அதி­யுயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்­தி­ருந்த உத்­த­ர­வாதம், கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கின்­றது.

சிரியா விஷயம் ரொம்ப 'சீரியஸ்': அமெரிக்கா, ரஷ்யா, சீனா பலப்பரீட்சை!!

நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே, மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம். அந்தஅளவுக்கு சிரியாவில் நிலைமை பயங்கரமாக உள்ளது. இங்கு நடக்கும்உள்நாட்டு சண்டை, சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் வான் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள் ஒருவேளை நேருக்கு நேர் மோதிக் கொண்டால், அதுவே மூன்றாம் உலகப்போருக்குவித்திடும். சின்ன சிரியாவால் இவ்வளவு பெரிய ஆபத்தா... அப்படி என்ன தான்சிரியாவில் நடக்கிறது என பார்ப்போம்.

கருணா – சங்கரி கூட்டணியின் மர்மம்

கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், இணைந்து கொள்ளப் போவதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, ஊடகங்களில் ஒரு பரபரப்புத் தென்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்து சென்ற கருணா, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதும்- பின்னர், பிரதி அமைச்சர், சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் கடந்தகால வரலாறு.

வியாழன், 29 அக்டோபர், 2015

லண்டன் தேவன் துன்னாலையில் வைத்து காவாலிகளால் படுகொலை!! நடந்தது என்ன?

துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பிள்ளையார் ஆலய அன்னதான மண்டபத்துக்குள் வைத்து இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா: மாளிகையில் வைத்து பாலியல் தொல்லை.. சவுதி இளவரசர் மீது 3 பெண்கள் புகார்

சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் மேன்சன் சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது மூன்று பணிப்பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.

புதன், 28 அக்டோபர், 2015

சுயமரியாதை

நம் கலாச்சாரப்படி, ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வைத்து அனைவரையும் வரவேற்போம்.
அதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாக காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.

வேர்ட் டிப்ஸ்: சொல்லைத் தேர்வு செய்வதில் கர்சர் பயன்பாடு

நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.

1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தொடரும் புலிகளின் ஜனநாயக மறுப்பில் லாபமீட்டும் பா உ எஸ் சிறிதரன் – லாச்சப்பல் முற்றுப்புள்ளியல்ல !

“பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியப் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினருமான ஜனாவும் பாரீஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”

ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.

இது நான் விரும்பியேற்ற வாழ்க்கையல்ல - விதியின் விளையாட்டு

ஓர் இளம் பெண்ணின் ஆதங்கம்

ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை. குழந்­தையை அவர்கள் இரு­வரின் பெயரி­லேயே பதிவு செய்தார்கள்

இது தான் உலகம் - இறந்த போது ஓடி வந்­த­வர்கள், இருக்­கின்ற போது திரும்­பியும் பார்க்­க­வில்லை

இது கிளி­நொச்­சியில் எங்கோ ஒரு குக்­கி­ரா­மத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளி­நொச்சி பரந்தன் நக­ரத்தில் இருந்து சில கிலோ மீற்­றர்கள் தொலைவில் பரந்தன், முல்­லைத்­தீவு வீதியில் சிவ­புரம் கிரா­மத்தில் உள்ள சிவ­கா­மியின் வீடு. சிவ­சுப்­பி­ர­ம­ணியம் சிவ­காமி, இவர், தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் மகளிர் அர­சியல் துறைப்­பொ­றுப்­பாளர் தமி­ழினி ஆவார். மீள்­கு­டி­யேற்­றத்தின் போது அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களால் ஒரு வருட காலத்­திற்கு என அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட தற்­கா­லிக கொட்­டில்கள் இவை.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

சவுதியில் ஏழு வயது மகளை அடித்தே கொன்ற தந்தை..

சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த சிறுமி யாரா (வயது 7) இந்த் சிறுமி கடந்த 3 மாதங்கள் தனது தந்தையுடன் ரியாத்தில்,வசித்து வந்தார்.சிறுமியின் தாயார் கணவனை விட்டு பிரிந்து விட்டார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மூன்று பேருடன் சேர்ந்து தனது தாயை தாக்கியுள்ளார்

வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா?

வாழைப்பழ தோலை இதுவரை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டவரா நீங்கள்? இனிமேல் வாழைப்பழ தோலையும் சேர்த்தே சாப்பிடுங்கள். ஆமாம், வாழைப்பழ தோலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிறார் சான் டியாகோ பகுதியை சேர்ந்த ஓர் ஊட்டச்சத்து நிபுணர். மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் சத்துக்கள் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊர்வலத்தின் போது சரிந்து விழுந்த இராட்சத விநாயகர் சிலை: அழிவுக்கு அறிகுறியா?…(காணொளி இணைப்பு)

வாகனம் ஒன்றில் ஏறி பக்தர்கள் புடைசூழ வலம் வந்து கொண்டிருந்த விநாயகர் சிலையானது திடீரென சரிந்து மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்துள்ளது.

வியாழன், 22 அக்டோபர், 2015

மட்டன் நெய் சோறு

மட்டன் கிரேவி செய்ய

தேவையான பொருட்கள்:

1.மட்டன்-1/2கி
2.பல்லாரி-2
3.தக்காளி-2
4.வத்தல் தூள்-2 ஸ்பூன்
5.மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
6.மல்லி தூள்-5ஸ்பூன்
7.மிளகு சீரகத் தூள்-1 ஸ்பூன்
8.தயிர்-2 டேபிள் ஸ்பூன்
9.மல்லி இலை
10.எண்ணெய்- தாழிக்க
11. இஞ்சி பூண்டு விழுது, பட்டை கருவா- தாழிக்க

மெது வடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு_250கிராம்
எண்ணெய்_ 500லி
உப்பு_தேவைக்கு
சோடா மாவு_ஒரு சிட்டிகை
வெங்காயம்_150கிராம்
ப.மிளகாய்_3
கறிவேப்பிலை,மல்லி இலை_தேவைக்கு

புதன், 21 அக்டோபர், 2015

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே?

(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு..!!

நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

53 கோடி ரூபாய் மோசடி – காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது வழக்கு..

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 8 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 5.3 கோடி ரூபாய்) மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்..!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட பின்பும் ஒரு சில பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓயாமல் இருக்கின்றது.

திங்கள், 19 அக்டோபர், 2015

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு - பகுதி – 2

இக்கட்டான பரிதாப நிலை

கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அப்போது இருந்த சாதாரண மக்களின் இக்கட்டான பரிதாபகரமான ஒரு நிலையை எடுத்துரைக்கிறது. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வான்படையினரின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டது. அவர்களில் இருவர் முறையே 18ம் மற்றும் 20 வயது நிரம்பிய வாலிபர்கள். பாடசாலையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். துயரமான முறையில் அவர்களைப் பிடித்துச் செல்வதற்காக யமன் இஸ்ராயேலின் கபீர் விமானத்தின் வடிவில் வந்திருந்தான். அந்த குறிப்பிட்ட பாடசாலையின் வகுப்புகளுக்கு மாணவர்கள் சமூகமளிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்தப் பாடசாலையின் அதிபர் மாணவர்களை அடையாளம் கண்டு கடத்;துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த அதிபர் இன்று மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக உயர்ந்த அரசியல் பதவியை வகித்து வருகிறார்.

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு பாகம் - 1

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்ltte training உயர் ஆணையர் அலுவலகத்தால் தொகுக்கப் பட்ட ஸ்ரீலங்கா பற்றிய மனித உரிமைகள் விசாரணை அறிக்கையில், ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) போன்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இராணுவக் குழுக்கள் என்பன தெற்காசியாவின் மிக நீண்ட போரில் புரிந்துள்ளதாகக் கூறப்படும் செயற்பாடுகள் பற்றிய ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு அங்கத்தவர்கள் புலிக்கொடிகளையும் மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தையும் ஏந்தியவாறு ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், இந்த ஐநா அறிக்கையை வாசிப்பவர்கள், தனது சொந்த மக்கள்மீதே எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்டுள்ள கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் அடைவார்கள்.

சனி, 17 அக்டோபர், 2015

தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வாயில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற மேற்கொள்ளும் ஒர் முறை தான் ஆயில் புல்லிங். இது பழங்காலம் முதலாக வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்றி வரும் ஓர் செயல்முறை.
ஆனால் இக்காலத்தில் இதை பலர் மறந்து, பல் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று நம் பணத்தை அவர்களுக்கு வாரி வழங்குகிறோம். ஒன்று தெரியுமா ஆயில் புல்லிங் செய்வதால், வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால்.....

நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும்.

அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள்.

வியாழன், 15 அக்டோபர், 2015

பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள.

ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை பிறந்த தேதி வைத்து, நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

விசாரணை சூழலை எதிர்கொள்ளும் லைக்கா மொபைல் அதிபர்

சிறிலங்கா அரசிடம் இருந்து லைக்க மொபைல் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா பில்லியன் கணக்கில் பணம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

புதன், 14 அக்டோபர், 2015

உதயன் முதலாளி சரவணபவனுக்கு எதிராக உதயன் ஊழியர்கள் நடாத்தும் முகப்பக்கம்

சப்ரா எனும் நிதி நிறுவனத்தை இயக்கி அதன் மூலம் பெருமளவு பணத்தை யாழ்ப்பாண மக்களிடம் இருந்து கொள்ளையிட்டு அவர்களை நடுத்தெருவில் விட்ட உதயன் பத்திரிகை முதலாளிக்கு எதிராக அப் பத்திரிகையின் ஊழியர்கள் சிலர் முகப்புத்தகப் பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

வாள்வெட்டு கலாசாரத்தின் உச்சக்கட்டம்- திருமணத்தின் போதும் வாளுடன் சென்ற மாப்பிள்ளை

ஐரோப்பாவில் வன்முறைகளும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வருவதற்கு அண்மையில் ஜேர்மனி முன்சனில் நடந்த திருமணம் உதாரணமாக அமைந்தது.

The BEST video on how to tie a tie by the expert


Share |

10 நொடியில Tie கட்ட


Share |

திங்கள், 12 அக்டோபர், 2015

வீடு வேண்டுமானால் பாலியல் உறவு வைக்க வேண்டும்.. இலங்கை பெண் புகாரால் இந்தியா அதிர்ச்சி

டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றந. இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை தொடங்கியுள்ளது.

முற்றிய சண்டை, என்ன தான் பிரச்சனை? ஆரம்பம் முதல் இறுதி வரை ஸ்பெஷல் தொகுப்பு

ஊர் இரண்டு பட்டால் கூத்து கட்டுபவர்களுக்கு கொண்டாட்டம் என்பார்கள், ஆனால் இங்கு அப்படியே தலைக்கீழாக உள்ளது. சட்டசபை தேர்தல் அறிக்கை, கட்சிக்கொள்கை கூட தெரியாத சில மக்களுக்கு கூட இந்த நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சனை தெரிந்துவிடும் போல. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலாக வளர்ந்து அடுத்த வாரத்தில் கிளைமேக்ஸை சந்திக்கவிருக்கின்றது. இப்படி 4 சுவற்றிற்குள் நடந்துக்கொண்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது நாடே தெரியும் படி செய்து விட்டனர். கோலிவுட்டே பரபரப்பில் இருக்கும் இந்த நடிகர் சங்க தேர்தலின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடந்தது? என்பதன் தொகுப்பு தான் இந்த பகுதி.

சமையலறையில் மறைந்துள்ள சில பாரம்பரிய அழகு பராமரிப்புப் பொருட்கள்!!!

பால்
பால் மிகவும் சிறப்பான கிளின்சர். தினமும் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் நீரினால் முகத்தைக் கழுவும் முன், கட்டனை பாலில் நனைத்து அதனைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறுவதோடு, சருமமும் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்!!!

* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி? அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??

இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா. ஆச்சர்யமா இருக்கா??

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள்

இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 3 முழு சின்ன பூண்டு [பொடியாக நறுக்கவும்]
சின்ன வெங்காயம் - 15 - 20 [பொடியாக நறுக்கவும்]
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
தக்காளி - 2
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு [கரைத்து வைக்கவும்]

தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில், 1937ம் ஆண்டு, மே 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. இவரது பெற்றோர் காசி கிலாகுடையார் - ராமாமிதம் ஆவர். மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தாவாகும். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் மனோரமா.

*12வயதில் மேடை நாடகம்*

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தேங்காய் பாலில் செய்த மஸ்கோத் அல்வா

தேவையான பொருள்:

1. மைதா : 1/2 கப்

2. தேங்காய் :1

3. சர்க்கரை : 1 1/2 கப்

4. முந்திரி துண்டுகள் : 10

இப்போ இத எப்படி செய்ய போறோம்னு பாக்கலாம்.

வியாழன், 8 அக்டோபர், 2015

செல்ஃபி எடுத்த ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்த ஸ்டாலின் (காணொளி இணைப்பு)

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் புரொபைலில் வீடியோ வசதிகள்..!

உலகின் பெரும்பாலானோர் புழங்கும் சமூக வலைதளமாகி விட்ட பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்ற நிலையில் தற்போது, பேஸ்புக் பயனர் களுக்கு புது விதமான அனுபவத்தை வழி வகுத்து கொடுத்துள்ளது.அதாவது இதற்கு முன்னர் பேஸ் புக்கில் profile picture ஒரு தனி படமாக பதிவேற்றம் செய்யும் வகையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அசையும் 7 வினாடி வீடியோக்களை profile picture ஆக பதிவேற்ற முடியும்.

புலிகள் சரணடைய முயன்றது எவ்வாறு?! கோத்தபாய வாயைத் திறக்கின்றார்

சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 7 அக்டோபர், 2015

திருநெல்வேலி அல்வா

இந்த அல்வால அப்படி என்னங்க இருக்குனு பாக்கலாம். அல்வா பார்க்க பொன்னிறத்தில் ஒரு ஜெல்லி போன்றே இருக்கும். இதை ருசித்து சாப்பிடும் பொழுது, தொண்டைகுழியில் வழுக்கிக்கொண்டு போவது போல் நமக்கே ஒருவிதமாக தோனும். இந்த அல்வா இந்த அளவுக்கு புகழ் பெற்றதுக்கு அப்படி என்ன வரலாறு இருக்கும்..? பார்க்கலாமா..!

அடப்பாவிகளா.. "இதையுமாய்யா" செல்பி எடுப்பீங்க...!

இது செல்பி பித்து பிடித்தவர்கள் அதிகம் உலா வரும் காலம். யாரைப் பார்த்தாலும் செல்பி, எதற்கெடுத்தாலும் செல்பி.. அந்த வகையில் இப்போது இன்னொரு நூதன செல்பியும் வந்து விட்டது.

திங்கள், 5 அக்டோபர், 2015

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வவுனியா பெண்ணா இப்படி…… பெற்றோர்களே உஷார்!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.

ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்

 - அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டி

உலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...

வியாழன், 1 அக்டோபர், 2015

அன்று... பிச்சை எடுத்த மாணவி: இன்று... ரஷ்யாவில் மருத்துவ மாணவி!

சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

வல்லிபுரம் ஆழ்வார் ஆலய திருவிழாவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 7 பேர் கைது

யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல