திங்கள், 31 ஜனவரி, 2011
யாழ் சம்பவங்களும் ஊடகங்களும்
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதி பர் திருமதி இமெல்டா சுகுமார் தெரி வித்துள்ளார். லண்டன் பி.பி.ஸி. தமிழோசைக்கு கடந்த 26ம் திகதி வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக யாழ் மக்களைப் பீதியில் உறைய வைத்த பல வன்செயல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பொலிஸ் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Labels:
கட்டுரைகள்,
யாழ் செய்திகள்
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான்.
ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.
ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.
இரண்டு சக்கரம் இரண்டு இருக்கைகளுடன் சொகுசு கார்!
சீனாவின் சங்காய் நகரத்தில் PUMA நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்தக்கார்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. மணிக்கு 56கிலோ மீற்றர்கள் பயணம் செய்யகூடிய வகையில் இதன் எஞ்சின் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 பவுண்ஸ் எடையுள்ள இந்த கார் இரு இருக்கைகளை மாத்திரம் கொண்டுள்ளதோடு இரு பெரிய சக்கரங்களை கொண்டது சிறப்பம்சமாக உள்ளது. திருமண தம்பதிகள் அல்லது காதல் யோடிகள் சந்தேசமாக வெளியில் சென்றுவர பெரிதும் பயனுள்ளதாக இந்த கார் அமைந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
தீயின்றியும் ஒளியை ஏற்படுத்த முடியும்
கோயில் குட முழுக்கு, திருமணம், நீத்தார் இறுதிச் சடங்கு என நீளும் எல்லாச் சடங்குகளிலும் தீ வளர்த்து, வேதம் ஓதி சடங்கு செய்வதை ஒரு அடிப்படையான செயல்முறையாகக் கொண்டுள்ளனர் ஆரியர். அவர்களுக்கு அக்னி எனப்படும் தீ, ஒரு முதன் மையான தெய்வமாக இருந்துள்ளது. இதை ஆய்வு செய்வது தான் இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம்.
Labels:
பலதும் பத்தும்
பழம்பெரும் மாளிகையில் அமையவுள்ள ஹோட்டல்
உலகில் செல்வத் திரவியத்தினதும், சீர்கேட்டினதும் பாரிய அடையாளச் சின்னங்களில் ஒரு இரவைக் கழிப்பதற்காக பிரான்ஸ் அரசு அங்கு வரும் உல்லாசப் பயணிகளிடம் 800 டொலர்களை அறவிடத் தீர்மானித்துள்ளது.
இதில் ஒன்று The Chate au de Versalles என்பதாகும். இது ஒரு காலத்தில் சூரியக் கடவுள் என அழைக்கப்பட்ட XIV லூயிஸ் மன்னனின் மாளிகையாகும்.
இதில் ஒன்று The Chate au de Versalles என்பதாகும். இது ஒரு காலத்தில் சூரியக் கடவுள் என அழைக்கப்பட்ட XIV லூயிஸ் மன்னனின் மாளிகையாகும்.
Labels:
உலகப்பார்வை
சனி, 29 ஜனவரி, 2011
மோ.சைக்கிள் விபத்து வயோதிபர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதியதில் கால் முறிவடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்
புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
Labels:
யாழ் செய்திகள்
ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் சதீஷ் வாகன விபத்திலேயே உயிரிழந்தார் : யாழ் பொலிஸார்
யாழ். பருத்தித்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சிக் கிழக்கு பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் கொலை செய்யப்படவில்லை எனவும் அவர் வாகன விபத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமக்கு இன்னமும் உறுதியான தகவல் தெரியவில்லை எனவும் தான் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமக்கு இன்னமும் உறுதியான தகவல் தெரியவில்லை எனவும் தான் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை,
யாழ் செய்திகள்
கணவனை தேடி சென்னை சென்ற பெண்
தனது கணவருக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பெண்ணொருவர் சென்னை பொலிஸாரிடம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முறைப்பாடொன்று செய்துள்ளார்.
இது தொடர்பில் சென்னை பொலிஸார் தெரிவிக்கையில்,
இது தொடர்பில் சென்னை பொலிஸார் தெரிவிக்கையில்,
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
ஆன்டன் செக்கோவ் பிறந்த நாள்
ஒரு ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர், உலக இலக்கியத்தில் மிகப் பெரும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவராவார். இவரது நாடகாசிரியர் பணிக்காலத்தில் இவர் கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு ஆக்கங்களை உருவாக்கினார். இவரது சிறந்த சிறுகதைகள் பிற எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர்களாலும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தனது இலக்கியத்துறைப் பணிக்காலத்தின் பெரும்பகுதியில் அவர் மருத்துவத் தொழில் புரிந்து வந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் ஒரு முறை குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
Labels:
இன்று
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Labels:
யாழ் செய்திகள்
வெள்ளி, 28 ஜனவரி, 2011
இலங்கைப் பெண் சவுதியில் கைவரிசை
சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர், வேலை வழங்குனர் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த வேளையில் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் மற்றும் மின் உபகரணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் ஜித்த மேற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் பணம் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் ஜித்த மேற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் பணம் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Labels:
இலங்கை
என் பராமரிப்பில் வளரும் குழந்தை ரஷ்ய பிரதமருக்கும் எனக்கும் பிறந்ததல்ல
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினுடனான இரகசிய காதல் தொடர்பில் குழந்தையொன்றுக்கு தாயாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் உடற்பயிற்சி வீராங்கனையான அலினா கபயெவா, தனக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் குழந்தை எதுவும் பிறக்கவில்லையெனவும், தன் பராமரிப்பிலுள்ள குழந்தை தனது குழந்தையே அல்ல எனவும் தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை
ஜோர்தானில் இலங்கை பணிப்பெண்களின் ஆர்ப்பாட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுச் செல்வோர் அந்நாட்டு வேலை வழங்குநர்களினால் மிகவும் மோசமாக அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக புகார்கள் மலிந்துவருகின்றபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வோரின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டதாகத் தெரியவில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டு விவாதத்தின் போது இத்தாலிய பிரதமன் அதிரடி குறுக்கீடு
இத்தாலிய பிரதமர் சிவ்வியோ பெர்லுஸ்கொனி விலைமாதுகளுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தொடர்பில் திங்கட் கிழமை இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சியின் போது இடை நடுவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெர்லுஸ்கொனி, நிகழ்ச்சியை நடத்தியவரை அவதூறு செய்து பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார்.
Labels:
உலகப்பார்வை
புதன், 26 ஜனவரி, 2011
லெனின் உடலை அடக்கம் செய்ய ஆதரவு
ரஷியாவின் மாபெரும் புரட்சி தலைவரான லெனின், கடந்த 1924-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சோவியத் யூனியன் உடைந்து ரஷிய நாடாக மாறி விட்டதால் லெனின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை வலுவடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இந்திய மாடல் அழகியை காதலிக்கும் ஆலிவுட் நடிகர்
பிரபல ஆலிவுட் நகைச்சுவை திரைப்படமான `தி மாஸ்க்' படத்தில் நடித்தவர், ஜிம் கேரி. புகழ் பெற்ற காமெடி ஹீரோவான இவர், ஜெனி மெக்கர்தி என்ற அழகியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், ஆஞ்சல் ஜோசப் என்ற இளம் மாடல் அழகியை காதலிக்க தொடங்கியுள்ளார். விழா, விருந்து உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.
Labels:
சினிமா
தலைமுடியை விற்க மலேசியாவில் திட்டம்
இந்தியாவில் கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடிகளை, `விக்' தயாரிப்பு மற்றும் மருந்து பொருட்களுக்காக விற்பனை செய்வது வழக்கம். இந்தியாவில் போலவே, மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலிலும் இந்திய பக்தர்கள் முடி காணிக்கை செய்கின்றனர். ஆண்டு தோறும் தைப்பூச திருநாளில் கிலோ கணக்கில் முடி குவிகிறது. இது வரை, இந்த முடியை கழிவு பொருளாக ஆறுகளில் கொட்டி வந்தனர்.
Labels:
உலகப்பார்வை
முன்னாள் மந்திரி மனைவியுடன் உறவு வைத்த பாதுகாவலர்
ஆலன் ஜான்சனும் அவருடைய மனைவி லாரா ஜான்சனும்
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு வரை உள்துறை மந்திரியாக இருந்தவர் ஆலன் ஜான்சன். இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவரான அவருக்கு பாதுகாவலராக பால் ரைஸ் (வயது 45) என்ற சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் இருந்தார். ஆலன் ஜான்சனிடம் பணியாற்றியபோது, அவருடைய மனைவி லாரா ஜான்சன் (வயது 46) மற்றும் பெண் உதவியாளர் ஆகியோருடன் பால் ரைஸ் உறவு வைத்துள்ளார். இந்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
புற்றுநோயை குணமாக்கும் ஒட்டகத்தின் சிறுநீர்
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சம் பேர் புற்றுநோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் பாதிகப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது என கணிப்பிடப்பட்டுள்ளது.
Labels:
மருத்துவம்
செவ்வாய், 25 ஜனவரி, 2011
உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வந்துள்ளது
உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.
Labels:
வினோதமான செய்திகள்
குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள் திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்; கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !
திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
Labels:
இலங்கை
இந்திய மீனவர் இலங்கையில் தஞ்சம் கோரவுள்ளனர்
இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
திங்கள், 24 ஜனவரி, 2011
பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
கெசல்கமுவ ஓயா ஆற்றின் நோர்வூட் நகருக்கு அருகிகிலுள்ள ஆற்றுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலத்தினை நோர்வூட் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Labels:
இலங்கை
அநுராதபுரம் சிறைச்சாலை மோதலில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்
அநுராதபுரம் சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் கைதிகளுக்கும் இன்று மாலை மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் செல்ல முடியாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Labels:
இலங்கை
வின்ஸ்டன் சர்ச்சில் நினைவு நாள்
சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen´s Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.
Labels:
இன்று
ஜேர்மனிய கவர்ச்சி நடிகை ஸெக்ஸி கோரா பரிதாப மரணம்
தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் ஜேர்மனிய திரைப்பட ரசிகர்களை ஆட்டிப்படைத்த கரோலின் பெர்ஜர் (ஸெக்ஸி கோரா எனும் செல்லப்பெயர்) , தனது மார்பகத்தை பெரிதாக்குவதற்கான 6 ஆவது சத்திரசிகிச்சையை அடுத்து கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார்.
பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற பெர்ஜர், கடந்த வருடம் ஜேர்மனிய “பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற பெர்ஜர், கடந்த வருடம் ஜேர்மனிய “பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
Labels:
உலகப்பார்வை,
சினிமா,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















































